Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடல் அலர்ஜியால் அதிமுக கவுன்சிலர் மகன் தற்கொலை.. ஜிம்மில் வழங்கிய புரோட்டீன் பவுடர் காரணமா?

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: குன்னுார் அதிமுக கவுன்சிலர் மகனின் உடலில் அலர்ஜி ஏற்பட்டு கடும் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜிம்மில் வழங்கிய புரோட்டீன் பவுடர் எடுத்ததால் உடல் அலர்ஜி ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் அட்டடி பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. அதிமுக சார்பில் குன்னூர் நகர் மன்ற கவுன்சிலராக இருக்கிறார். இவரது இளைய மகன் ராஜேஷ் கண்ணா (17), கோத்தகிரி தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம், 31 ஆம் தேதி இவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

Police Probe AIADMK Councillor s Son s Suicide in Coonoor Family Blames Gym Protein Powder

வயிற்று பகுதியில், 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ராஜேஷ் கண்ணா. இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

உடற்பயிற்சிக் கூடத்தில் வழங்கப்பட்ட புரோட்டின் பவுடர் காரணத்தால் உடலில் அலர்ஜி ஏற்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று அப்பர் குன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், உறவினர்கள் மற்றும் பாஜக, அதிமுக கட்சியினர் திரண்டனர்.

டிஎஸ்பி ரவி, இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். புரோட்டீன் பயன்படுத்தியதால் தான், மாணவரின் உடலில் தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களிடம் விசாரிக்கப்படும். இந்த புரோட்டின் எடுத்த மற்றவர்களுக்கும் பாதிப்பு உள்ளதா? இவர் கூடுதலாக எடுத்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். அதன் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குருமூர்த்தியின் சகோதரர் பாலகங்காதரன் கூறுகையில், "ராஜேஷ் கண்ணா, 2023 ஆம் ஆண்டில் இருந்து மவுன்ட் ரோட்டில் உள்ள ஜிம்மில் பயிற்சிக்கு சென்று வந்தார். ஜிம்மில் கொடுத்த ஸ்டீராய்டு புரோட்டின் பவுடர் காரணத்தால், உடலில் அலர்ஜி ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். சம்பந்தப்பட்ட ஜிம் பயிற்சி மைய உரிமையாளர் தான், தனது தற்கொலைக்கு காரணம் என, ராஜேஷ் கண்ணா கடிதம் எழுதி வைத்ததால், சம்பந்தப்பட்ட ஜிம் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+