20 நாட்களாக ஆட்டம் காட்டிய T23 ஆட்கொல்லி புலி.. மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர்
நீலகிரி: மனிதர்களை வேட்டையாடி வந்த T-23 ஆட்கொல்லி புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலியை உயிருடன் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா பகுதிகளில் புலி ஒன்று 4 நபர்களையும் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேடும் பணி தீவிரம்
T23 என அழைக்கப்படும் ஆட்கொல்லி புலி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்த புலியை 2 வாரங்களுக்கு மேலாக வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த ஆட்கொல்லி புலியைத் தேடும் பணிகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், அதிரடிப் படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் ஆகியோர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மயமான புலி
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி காலை அந்த புலியானது சிங்கார வனப்பகுதியில் தென்பட்டது. அதன் பிறகு திடீரென கடந்த சில நாட்களாக அந்த புலி மாயமானது. இதனால் எங்கு அந்தப் புலி உயிரிழந்திருக்குமோ என அஞ்சப்பட்டது. இந்தச் சூழலில் தான் அந்த புலி திடீரென வனத்துறை சிசிடிவி கேமராவில் கடந்த சில நாட்களுக்கு முன் பதிவானது. இதையடுத்து தேடுதல் வேட்டை மீண்டும் தீவிரமானது.

மயக்கமருந்து
புலி நடமாட்டம் உள்ள அதே பகுதியில் நான்கு இடங்களில் மரத்தின் மீது பரன்களை அமைத்து அதன் மீது கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் கண்காணித்து வந்தனர். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ட்ரோன் கேமராவை கொண்டும் கண்காணிப்பு பணி நடைபெற்றது. இந்தச் சூழலில் T-23 புலிக்குக் கடலூர் மசினக்குடி அருகே மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது
மேலும், மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலியை உயிருடன் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நள்ளிரவில் மசினகுடி - முதுமலை சாலையில் அந்த புலி சென்று கொண்டிருந்த போது கால்நடை மருத்துவக் குழு 4 முறை மயக்க ஊசியைச் செலுத்தியது. அதில், இரண்டு ஊசிகள் T23 புலியின் உடம்பில் ஏறியது. இதையடுத்து புலி வனப்பகுதிக்குள் ஓடியது. புலியைப் பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications