திறக்கப்படும் ஊட்டி.. செப்டம்பர் 9 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..இதுதான் ரூல்ஸ் பார்த்துக்கங்க!
ஊட்டி: செப்டம்பர் 9ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா ஊரடங்கால் நீலகிரி மாவட்டம் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதியில் இருந்தே முற்றிலும் முடங்கி போய் உள்ளது. சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அந்த மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலான சுற்றுலா முழுமையாக முடங்கி உள்ளது.
தமிழகத்தில் சுமார் ஐந்து மாதத்திற்கு பிறகு பேருந்துகள் முழு அளவில் இயங்க தொடங்கி உள்ளன. எனினும் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைவாசல் தளங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை.

இபாஸ் கட்டாயம்
இபாஸ் இருந்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்கிற நிலை உள்ளதால் அங்குள்ள விடுதிகள் தொடர்ந்து முடங்கி உள்ளன. சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

ஊட்டி கலெக்டர் அறிவிப்பு
இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி முதல் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காக்கள் திறக்கபடும் என்றார். தமிழக அரசின் அறிவிப்பிற்கு பின் மற்ற சுற்றுலா தளங்கள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

தனி இபாஸ் வழங்கப்படும்
நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தனி இ பாஸ் வழங்கபடும் என்றும் அறிவித்துள்ளார்.

ஆதார் அவசியம்
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்றும், உள் மாவட்ட சுற்றுல பயணிகள் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications