பிளாக் லிஸ்டில் இருந்து எஸ்கேப்பான பாக்... பாரீஸ் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு
பாரீஸ்:பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைக்கு கடிவாளம் போடும் வகையில், பாரீசில் நிதி நடவடிக்கை பணிக் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் இந்தியா மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.

அதுதவிர, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிற எப்ஏடிஎப் என்னும் நிதி நடவடிக்கை பணிக்குழுவை இந்தியா நாடியுள்ளது. அந்த குழுவிடம் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்குமாறு இந்தியா வலியுறுத்தி உள்ளது.
காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய கார் குண்டு வெடிப்பில், பாகிஸ்தான் அரசு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறி ஆவணத்தை எப்ஏடிஎப் என்னும் நிதி நடவடிக்கை பணிக்குழுவிடம் இந்தியா அளித்துள்ளது.
ஒரு வார காலமாக நடைபெற்று வரும் இந்த கூட்டம் தற்போது முடிவு அடைந்துள்ளது. கூட்டத்தில், இந்தியாவின் கோரிக்கை குறித்து விவாதிக்கப் பட்டது.
ஏற்கனவே கிரே லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான் நாடு இடம்பெற்றுள்ளது. வரும் அக்டோபர் மாதம் வரை அந்த பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அந்த கெடு முடிய.. 7 மாதங்கள் இருப்பதால்... தற்போது கருப்பு பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க முடியாது என்று நிதி நடவடிக்கை பணிக்குழு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளது.
அதே வேளையில், கிரே லிஸ்டில் இருப்பதற்கான காலக்கெடு முடியவில்லை என்று பாகிஸ்தான் கூறியதை நிதி நடவடிக்கை பணிக்குழு ஏற்றுக் கொண்டு இருக்கிறது. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் இந்த முடிவு, இந்தியாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் நிதி நடவடிக்கை பணிக்குழு என்ற அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. தீவிரவாதத்தை எந்த நாடு ஆதரக்கிறதோ, அந்த நாடுகளுக்கு உலக நிறுவனங்கள் கடன் வழங்குவதை ரத்து செய்து விடும். தீவிரவாதத்தை கண்காணிக்கும் அமைப்புகளில் ஒன்றாக இந்த எப்ஏடிஎப் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications