பிரான்ஸில் கம்பீரமாக நிற்கும் "ஐஎன்எஸ் சென்னை.." பிரதமர் மோடியுடன் சென்ற முப்படை டீம்.. என்ன காரணம்
பாரீஸ்: பிரதமர் நரேந்திர மோடி இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், நமது முப்படைகளைக் கொண்ட ஒரு குழுவும் அங்கே சென்றுள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தான் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கே அதிபர் பைடன்- மோடி இடையே சந்திப்பு நடந்த நிலையில், பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே அவருடன் முப்படைகளைக் கொண்ட ஒரு குழுவும் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எஸ் சென்னை: இந்தியக் கடற்படை மூலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டும் ஏவுகணை அழிப்புக் கப்பல் "ஐஎன்எஸ் சென்னை". பிரதமர் நரேந்திர மோடி இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், இந்த ஐஎன்எஸ் சென்னை கப்பலும் இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளது. பிரான்சில் பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க ஐஎன்எஸ் சென்னை இப்போது பிரான்ஸிற்கு சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரான்ஸில் நடைபெறும் இந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் இந்தியாவின் முப்படை சார்பிலும் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தியக் கடற்படை மூலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் ஐஎன்எஸ் சென்னை, பிரெஸ்டில் உள்ள பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரான்சின் பிரெஸ்ட் என்ற இடத்திற்கு இப்போது சென்றுள்ளது" என்றார்.

பாஸ்டில் தின கொண்டாட்டம்: பிரான்ஸ் நாட்டில் நாளை ஜூலை 14ஆம் தேதி பாஸ்டில் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த ஒரு ராணுவக் குழு பங்கேற்கும். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நீண்ட காலமாகவே நல்ல ஒரு நட்பு இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாகவே முப்படை குழு இந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது. பிரதமர் மோடி இப்போது பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

பிரதமர் மோடி: அது மட்டுமின்றி அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் மோடி கலந்துரையாட உள்ளார். பிரதமரின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைகிறது. இதற்காகப் பிரதமர் மோடி அங்குள்ள பல்வேறு நிறுவன சிஇஓ-களையும் சந்தித்துப் பேச உள்ளார். அங்குள்ள புகழ்பெற்ற லா சீன் மியூசிகேல என்ற இடத்தில் பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் அங்குள்ள இந்தியர்களிடையே பேச உள்ளார்.
பிரதமர் மோடி அங்குச் செல்லும் முன்பு, "நமஸ்தே பிரான்ஸ்" உட்படப் பல நிகழ்ச்சிகளை இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.. பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, ஆற்றல், காலநிலை மாற்றம், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று கூறப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications