பீகார் மாநில தலைமை செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவுக்கு பலி - முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல்
பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் கொரோனா தொற்றுக்கு பலியானார். பாட்னாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாட்னா: பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தினசரியும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். ஏழை, பணக்காரன், அரசு அதிகாரி, தொழிலதிபர் என எந்த வித வித்தியசாமும் இன்றி பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை இயக்குநர், மருத்துவர் அகமது அப்துல் ஹய் தெரிவித்தார்.
1985ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அருண் குமார், கடந்த பிப்ரவரி பிகார் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி முடியவிருந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பிகார் முதல்வராக நிதிஷ் குமார் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த மறுநாள் தலைமைச் செயலாளராக அருண் குமார் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண்குமார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த வேதனையையும், வருத்தங்களையும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மறைவுக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications