பீகார்: கட்சியையே ஆட்டைய போட பார்த்தாரு நிதிஷ்குமார்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மாஞ்சி மகன்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: நாடு தழுவிய அளவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கூட்டணி கட்சியான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா குடைச்சல் கொடுக்கிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இருந்து ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா நிறுவனர் ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ்குமார் சுமன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Bihar: Minister Santosh Kumar resigns from CM Nitish Kumar Cabinet

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார் நிதிஷ்குமார். பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளன. இதே பார்முலாவையே நாடு முழுவதும் உருவாக்க தீவிரம் காட்டுகிறார் நிதிஷ்குமார். இதன் ஒரு கட்டமாக, ஜூன் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை நிதிஷ்குமார் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்நிலையில் பீகார் அமைச்சரவையில் இருந்து சந்தோஷ்குமார் சுமன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக சந்தோஷ்குமார் சுமன் கூறுகையில், ஐக்கிய ஜனதா தளத்துடன் அவாமி மோர்ச்சாவை இணைக்க வேண்டும் என நெருக்கடி தருகிறார் நிதிஷ்குமார். பீகார் அமைச்சராக பதவியில் நீடித்தால் கட்சியே இருக்காது என்கிற நிலைதான் உள்ளது. எங்கள் கட்சியைக் காப்பாற்றவே ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+