பீகாரில் காங். 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனம்: சிபிஎம் சாடல்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டது என்பது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனத்தை காட்டுகிறது என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீப்பிள்ஸ் டெமாக்ரஸி ஏட்டின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:

பாஜக வாக்கு சதவீதம் குறைவு
பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணிக்கும் ஆர்ஜேடி-காங். இடதுசாரிகள் கூட்டணிக்கும் இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் 0.2% மட்டும்தான். 2019 லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக கூட்டணியின் 12.4% வாக்குகள் இடம்பெயர்ந்திருக்கிறது.

மக்கள் வெளிப்படுத்திய கோபம்
நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி, கோபம் ஆகியவற்றின் வெளிப்பாடால் ஜேடியூ 43 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்ற பின் பாஜக அணிக்கு நிதிஷ்குமார் தாவியதை மக்கள் ஏற்கவில்லை.

வென்ற இடதுசாரிகள்
பீகார் தேர்தலில் இடதுசாரிகள் 16 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர். பாஜகவைப் பொறுத்தவரையில் வழக்கமான் இந்துத்துவா செயல்திட்டங்களையே பீகார் தேர்தலில் முன்வைத்தது. மதவெறியும் ஜாதி அரசியலும் இணைந்ததால் பாஜக 74 இடங்களை வென்றிருக்கிறது.

காங். அதிக இடங்கள்
தேர்தல் கூட்டணிகளில் இடம்பெறும் கட்சிகள் தங்களது சக்திக்கு அதிகமான இடங்களை பெற கூடாது என்கிற உண்மையையும் இத்தேர்தல் முடிவு சொல்கிறது. காங்கிரஸ் கட்சியானது 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனத்தை காட்டுகிறது. இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.
-
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications