10-ம் வகுப்பில் 99.4 % மதிப்பெண்..! கஷ்ட காலத்திலும் சாதித்த மாணவி...நெட்டிசன்கள் பாராட்டு
பாட்னா: பீகாரில் தந்தையால் கைவிடப்பட்டு பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்வி கற்பதில் ஆர்வமுடையவர்களுக்கு எதுவும் தடையாக இருக்காது. குறிப்பாக ஏழ்மையில் பிறந்தாலும், துன்பங்களோடு வளர்ந்தாலும் கற்க வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்.
எத்தனை தடைகளையும் தாண்டி கல்வியில் சாதிப்பார்கள். இதற்கு எடுத்துக்காட்டாய் தான் தற்போது பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பாட்னா மாணவி சாதனை
சிறு வயதிலேயே தாய் உயிரிழந்ததாலும், தந்தையும் நீ வேண்டாம் என்று உதறி தள்ளியதாலும் ஆதரவின்றி தவித்த சிறுமி தான் தான் தற்போது அண்மையில் நடந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீத மதிப்பெண் எடுத்து சாதித்து காட்டியுள்ளார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த அந்த சிறுமி தடைக்கல் ஒவ்வொன்றையும் படிக்கல்லாக மாற்றி தற்போது இந்த பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

வருண் காந்தி எம் பி டுவிட்
பாஜக எம்பி வருண்காந்தி மாணவி ஸ்ரீஜா மற்றும் அவரது பாட்டி இணைந்து அளித்த பேட்டி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், மாணவியின் படிப்பு சார்ந்து அனைத்துக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். மாணவிக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தால் நான் அதிர்ஷ்டசாலி என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பலரும் மாணவி ஸ்ரீஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் மாணவியின் இந்த வெற்றி. . எங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

நினைத்து வருத்தப்படுவார்
பாஜக எம்பி வருண் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், ஸ்ரீஜாவின் பாட்டி கூறுகையில், "10-ம் வகுப்பு தேர்வு முடிவினை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஸ்ரீஜாவின் தாய் சிறுவயதிலேயே உயிரிழந்துவிட்டார். மனைவி இறந்ததால், ஸ்ரீஜாவை என்னிடம் விட்டு விட்டு அவர் வேறு திருமணம் செய்துகொண்டார். அதற்கு பின்னர் என்னையோ, ஸ்ரீஜாவையோ பார்க்க வரவில்லை. இப்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது. தற்போது ஸ்ரீஜா எடுத்த மதிப்பெண்களை அவர் பார்த்தால் மகளை விட்டு சென்றதை நினைத்து வருத்தப்படுவார்" என்று கூறினார்.

நெகிழ்ச்சியுடன் பாராட்டு
இந்த நிலையில், மாணவி ஸ்ரீஜா எடுத்த மதிப்பெண் குறித்து நெட்டிசன்கள் பலர் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். திறமையுள்ளவர்கள் வாய்ப்பை தேடமாட்டார்கள். . வாய்ப்பை உருவாக்குவார்கள் என்பதற்கு மாணவி ஸ்ரீஜாவே சான்று என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதேபோல், கல்வி ஒருவருக்கு எவ்வளவு பெருமையளிக்கிறது என்பதற்கு மாணவி ஒரு எடுத்துக்காட்டு என மற்றொருவர் பதிவிட்டிருந்தார். இதுபோல பலர் மாணவியின் சாதனைக்கு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications