பீகாரில் ஒரே மயானத்தில் 789 உடல்கள்.. ஆனால் அரசு கூறுவது வெறும் 8 மரணங்கள்.. ஹைகோர்ட் அதிருப்தி
பாட்னா: பீகாரின் பக்ஸர் பகுதியில் கொரோனா உயிரிழப்புகள் குறித்து முரனான தரவுகளை அளித்த பீகார் அரசு துறைகளுக்குக் கண்டனம் தெரிவித்த பாட்னா நீதிபதிகள், விரிவன புதிய அறிக்கையை 2 நாட்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்
உத்தரப் பிரதேசம் - பீகார் எல்லையில் அமைந்துள்ள பக்ஸர் நகரில் அமைந்துள்ள கங்கை நதியில் கடந்த வாரம் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்னரே உத்தரப் பிரதேசத்திலும் கங்கை நதியில் சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிபதிகள் அதிருப்தி
இது பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த வழக்கை பாட்னா உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக மாநிலத் தலைமைச் செயலாளரும், மற்ற அரசு அமைப்புகளும் சமர்ப்பித்த பிரமாண பத்திரங்கள் முற்றிலுமாக முரணாக இருந்ததால், நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.

789 உடல்கள்
பக்ஸர் பகுதியில் மார்ச் 1ஆம் தேதி முதல் எட்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகத் தலைமைச் செயலரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மே 5 முதல் மே 14 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பக்ஸரில் உள்ள சார்தாம் பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் மட்டும் 789 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் டிவிஷன் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

புதிய அறிக்கை
அரசு துறைகளின் அறிக்கைகளே இப்படி முரணாக இருப்பதால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள் 2 நாட்களில் புது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், டிவிஷன் ஆணையம் சமர்ப்பித்துள்ள 789 என்ற எண்ணிக்கையில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.

நீதிபதிகள்
பக்ஸர் நகரின் மொத்த மக்கள் தொகை 17 லட்சமாகும். இதில் ஒரு மயானத்தில் மட்டும் 789 பேர் உடல்கள் எரிக்கப்பட்டிருந்தால் மொத்த உயிரிழப்புகள் என்னவாக இருக்கும்? உயிரிழப்பிற்கான காரணம் உள்ளிட்டவற்றைக் கொண்ட விரிவான புதிய ரிப்போர்ட்டை அரசு இன்னும் இரண்டு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications