"பேராபத்து.. நாடு உள்நாட்டு போரை நோக்கி செல்கிறது.. காரணம் பாஜக தான்!" விளாசும் லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு யாதவ் பாஜகவை மிகக் கடுமையாகச் சாடும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் இப்போது நிதிஷ் குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக இடையேயான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. என்ன தான் கூட்டணி என்றாலும் கூட இரு கட்சிகளுக்கும் இடையே சிறுசிறு பூசல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பூசல்கள் அதிகரிக்கும் போதெல்லாம் நிதிஷ்குமார் தான் பாஜகவை மட்டும் நம்பி இல்லை என்பதைக் காட்டும் நடவடிக்கையில் இறங்குவார். சமீபத்தில் அவர் எதிர்க்கட்சியின் தேஜஸ்வி யாதவ் நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொண்டிருந்தார்.

லாலு பிரசாத் யாதவ்
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய பாரதிய ஜனதா கட்சிக்கு மிகக் கடுமையாகச் சாடி உள்ளார். இந்தியா இப்போது உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை சிக்கல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சாடி உள்ள அவர், இதற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் பீகார் முன்னாள் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

உள்நாட்டுப் போர்
சம்பூர்ண கிராந்தி திவாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லாலு பிரசாத் யாதவ், "பாஜக செயல்படும் விதத்தில் பார்க்கும்போது, நாடு உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று நான் நாட்டு மக்களை அழைக்கிறேன். இப்போது நாம் ஒற்றுமையாகப் போராட வேண்டும், அப்போது தான் வெற்றி பெற முடியும்" என்றார்.

போராடவேண்டும்
மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அரசுக்கு தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக எப்படி நடவடிக்கை எடுத்தாலும் சரி, ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் லாலு பிரசாத் யாதவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
Recommended Video

குற்றவாளி
கடந்த பிப்ரவரியில், ராஞ்சியில் உள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம், ஐந்தாவது கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக டோராண்டா கருவூலத்தில் இருந்து மோசடி செய்ததற்காக லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், டோராண்டா கருவூலத்தில் இருந்து 139.35 கோடி ரூபாய் சட்டவிரோதமாகப் பெற்ற வழக்கில் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி!












Click it and Unblock the Notifications