மத்தியப்பிரதேசத்தில் ஒரு நாள் இரவில் லட்சாதிபதியான தொழிலாளி!!
பன்னா: மத்தியப்பிரதேச மாநிலம் பன்னாவில் சுரங்கம் வெட்டும்போது தொழிலாளி ஒருவருக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிலான மூன்று வைரங்கள் கிடைத்தன. இதையடுத்து ஒரே நாளில் அவர் லட்சாதிபதியானார்.
இதுகுறித்து பன்னா மாவட்ட வைர அதிகாரி ஆர்கே பாண்டே கூறுகையில், ''சுபல் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் சுரங்கம் தோண்டியுள்ளார். அப்போது அவருக்கு மூன்று வைரங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் மொத்த எடை 7.5 காரட் ஆக இருந்தது. இந்த வைரங்களின் மதிப்பீடு ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 35 லட்சமாக இருக்கலாம். மாவட்ட வைர அலுவலகத்தில் அந்த வைரங்களை டெபாசிட் செய்துள்ளார். அந்த வைரங்கள் ஏலம் விட்ட பின்னர் அதற்குரிய பணம் அவரிடம் அளிக்கப்படும்'' என்றார்.

இந்த வைரங்கள் கிடைத்ததன் மூலம் ஒரே நாள் இரவில் சுபல் பணக்காரர் ஆகி இருக்கிறார். இந்த வைரங்களின் மீது 12 சதவீத வரி விதிக்கப்படும். இது பிடித்தம் போக மீதம் இருக்கும் 88 சதவீத பணம் அவரது கையில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு இதே பன்னாவில் மேலும் ஒரு தொழிலாளிக்கு 10.69 காரட் எடையிலான வைரம் கிடைத்துள்ளது. உலகிலேயே வைரச் சுரங்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்று பன்னா. ஆனால், இந்த இடம் மிகவும் பின் தங்கிய இடத்தில் உள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications