Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் முடிவால் சிக்கலில் யோகி ஆதித்யநாத்! உ.பி. முதல்வர் பதவியே பறிபோகும் வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: சமீப காலமாகப் பேசப்பட்டு வரும் சாதி வாரி கணக்கெடுப்பு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்ற சில தலைவர்களுக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்ற பார்வை எழுந்துள்ளது. யோகி ஆதித்யநாத்தின் அரசியல் பெரும்பாலும் மதத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதி அடையாளம் மேலோங்கினால், அது அவரது செல்வாக்கைப் பாதிக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

யோகி ஆதித்யநாத் மீது சில சமயங்களில் சாதியவாதக் குற்றச்சாட்டுகளும் இருந்தாலும், அது தற்போதைய சூழ்நிலையில் மட்டுமே எடுபடும் எனப்படுகிறது. சாதி வாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, மக்கள் தொகைக்கேற்பவே அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் வாய்ப்புகள் அமையும். "மக்கள் தொகை எவ்வளவு அதிகமோ, அவ்வளவு பங்கு" என்ற சூத்திரம் மட்டுமே அப்போது எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Caste Census Yogi Adityanath Narendra modi

உத்தரப் பிரதேசத்தைப் போலவே, பீகாரிலும் சாதி அரசியல் மிகவும் பரவலாக உள்ளது. இருப்பினும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது சாதி பலம் சிறியதாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBC) மற்றும் மகா தலித்துகள் ஆகியோரை ஒருங்கிணைத்து ஒரு புதிய வாக்குப் வங்கியை உருவாக்கியுள்ளார். அவரது இந்தச் சமூகப் பொறியியல் (Social Engineering) யுக்தி, லாலு பிரசாத் யாதவின் முஸ்லிம்-யாதவ் (MY) சமன்பாட்டையும், பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்வா (Hindutva) அஜண்டாவையும் முறியடிக்கும் அளவுக்கு வெற்றிகரமாக உள்ளது.

தனது அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள, யோகி ஆதித்யநாத்தும் நிதிஷ் குமார் போல ஏதேனும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மத அரசியலின் "நல்ல நாட்கள்" முடிவுக்கு வரக்கூடும் என்ற சூழல் நிலவுகிறது.

பலவீனமடையும் ஹிந்துத்வா அஜண்டா?

"பிரிந்தால் வெட்டப்படுவோம்" போன்ற கூர்மையான முழக்கங்களால் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் வேகம் பெற்று வந்தது. ஆனால், சாதி வாரி கணக்கெடுப்பு இந்தப் பாதையில் ஒரு வேகத்தடையாக அமையலாம். இந்தக் கணக்கெடுப்பால் சாதி அரசியல் மேலோங்கினால், ஹிந்துத்வா அஜண்டா பலவீனமடையும். ஹிந்துத்வா அஜண்டா பலவீனமடைந்தால், இத்தகைய முழக்கங்களும் தானாகவே பின்னுக்குத் தள்ளப்படும்.

அப்போது, 'ஹல்லா போல்', 'திலக், தராசு, தல்வார்...' போன்ற சாதி அடிப்படையிலான முழக்கங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கத்துக்கும் வலுவான ஆதரவு தேவைப்படலாம். 2024 மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் பாஜக பெற்ற தோல்வி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். மில்கிபூர் தொகுதியை சமாஜ்வாதி கட்சியிடமிருந்து யோகி ஆதித்யநாத் மீட்டெடுத்தது உண்மைதான் என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

Caste Census Yogi Adityanath Narendra modi

சாதி அரசியலின் ஆதிக்கம் அதிகரித்தால் சவால்களும் கூடும்

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் இடங்கள் குறைந்த பிறகு, துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா (OBC தலைவர்) வெளிப்படையாக யோகி ஆதித்யநாத்தை விமர்சித்தது, அரசுக்கும் கட்சி அமைப்புக்கும் இடையிலான வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியது போன்றவை இனிமேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேசவ் பிரசாத்துக்கு இனி றெக்கை முளைக்கும். அது யோகிக்கு பெரும் சவாலாக மாறும்.

சில நாட்கள் விமர்சித்த பிறகு "மேலிட சிக்னலால்" கேசவ் பிரசாத் மௌரியாவின் நிலைமை தணிந்தாலும், எதிர்காலத்திலும் இதே நிலை தொடரும் எனச் சொல்ல முடியாது. தற்போது ஒரு கேசவ் பிரசாத் மௌரியாதான் இருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்புக்குப் பிறகு பல்வேறு சாதிகளைச் சேர்ந்த தலைவர்களும் வெளிப்படுவார்கள்.

அப்போது, மத்தியப் பிரதேசத்தில் நடந்ததைப் போன்ற ஓர் அரசியல் மாற்றம் உத்தரப் பிரதேசத்திலும் நிகழலாம். சிவ்ராஜ் சிங் சௌகானுக்குப் பதிலாக வேறு ஒருவரை முதலமைச்சராக்கியது போல, யோகிக்கு மாற்றாக வேறு ஒருவரை மேலிடம் நியமிக்க வாய்ப்புள்ளது.

ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், சாதி வாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, யோகி ஆதித்யநாத் மீதான "தாகூர்வாதம்" (Thakurism - தாகூர் இனத்தவருக்குச் சாதகமாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு) என்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்கலாம். ஏனெனில், அப்போது பிராமணத் தலைவர்கள் மற்றும் பிற சாதித் தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.

இந்து யுவ வாகினி போன்ற அமைப்புகள் செயலற்றதாக மாறும்?

யோகி ஆதித்யநாத் அரசியலில் அடைந்த உயரங்களுக்கு, கோரக்பூர் மடம் அடித்தளம் அமைத்திருந்தாலும், அவரது பழைய அமைப்பான 'இந்து யுவ வாகினி'தான் ஆரம்பத்தில் அதற்கு விரிவாக்கத்தையும் உயரத்தையும் கொடுத்தது.

சாதி அரசியல் ஆதிக்கம் செலுத்தினால், இந்து யுவ வாகினி போன்ற மத அடிப்படையிலான அமைப்புகளின் செல்வாக்குக் குறையும். அதே நேரத்தில், சாதி அடிப்படையிலான அமைப்புகள் வலுப்பெற வாய்ப்புள்ளது. ஆனால், சாதி அடிப்படையிலான அமைப்புகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், அந்தச் சாதியின் மக்கள் தொகை அதிகமாக இருக்க வேண்டும்.

நிதிஷ் குமார் விவகாரத்தில், அவருக்கும் பீகாரில் பெரிய சாதி பலம் இல்லை என்றாலும், அவரது அரசியல் உத்தி வெற்றிகரமாக அமைந்தது.

யோகி ஆதித்யநாத்தின் "புல்டோசர் ஆட்சி" பாஜக ஆளும் மாநிலங்களில் பிரபலமாக இருந்தாலும், நிதிஷ் குமார் செய்தது போல சாதி அடிப்படையிலான சமூகப் பொறியியலை அவரால் செய்ய முடியவில்லை. யோகி ஆதித்யநாத் இதுபோன்ற ஒரு நடவடிக்கையின் மூலம் தனது அரசியல் நிலைக்கு வலுசேர்க்க முடியும் என்றும், மாறுகின்ற அரசியல் களத்தை எதிர்கொள்ள ஒரு புதிய யுக்தி தேவைப்படுகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+