"பிரதமர் மோடிக்கு நன்றி.." பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு நிதிஷ் குமார் வெளியிட்ட முதல் கமெண்ட்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதிஷ் குமாரின் முதல் டுவிட்டர் பதிவு இதுவாகும்.

மக்கள் மிக உயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும் நிதிஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் நிதீஷ் குமார் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில், என்.டி.ஏ பெற்றுள்ள 125 இடங்களில், ஜே.டி.யூ வெறும் 43 இடங்களைத்தான் வென்றுள்ளது. மறுபுறம் பாஜக சிறப்பாக செயல்பட்டது. 74 இடங்களை பாஜக வென்றுள்ளது.
ஆனால், பாஜக தனது தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியை மதிக்கப்போவதாக கூறியுள்ளது, அங்கு நிதீஷ் குமாரே முதல்வராக தொடருவார், பாஜக ஆதரவு அளிக்கும் என்று பாஜக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications