பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்:குடும்பத்துல பங்ஷன்.. நிதிஷுக்கு 'லீவு லெட்டர்’ அனுப்பிய RLD தலைவர்!.
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ராஷ்டிரிய லோக் தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார். குடும்பத்தில் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தம்மால் பாட்னா கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு லீவு லெட்டர் அனுப்பி இருக்கிறார் ஜெயந்த் சவுத்ரி.
பாட்னாவில் இன்று காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த அண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது தொடர்பாக இன்றைய பாட்னா ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஜேடியூ, ஆர்ஜேடி உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பாட்னாவில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலாது என ராஷ்டிரிய லோக் தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதிஷ்குமாருக்கு அனுப்பிய கடிதத்தில் தமது குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தவிர்க்க இயலாத இந்த காரணத்தால் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை எனவும் பள்ளிகளில் மாணவர்கள் லீவு லெட்டர் அனுப்புவது போல நிதிஷ்குமாருக்கு ஜெயந்த் சவுத்ரி கடிதம் அனுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications