வெளியில் துறவி.. கோயிலுக்குள் 'திறவி'.. அதுவும் புத்த கயாவில்.. என்னே ஒரு தைரியம்.. தூக்கிய போலீஸ்
பாட்னா: பீகார் மாநிலத்தில், பிரசித்தி பெற்ற புத்த கயா கோயிலில், ரஷ்ய நாட்டை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் கைதாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்?
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த மகாபோதிக் கோயில். புத்த மதத்தின் மரபு வழி கதைகளின்படி துறவியாக அலைந்து திரிந்துக்கொண்டிருந்த கௌதம புத்தர் கி.மு 530 காலகட்டத்தில் இந்தியாவின் தற்போதை பீகாரில் ஓரிடத்தில் தியானத்திற்காக அமர்ந்துள்ளார். தொடர்ந்து மூன்று பகல்கள் மூன்று இரவுகள் இப்படியே தியானத்தில் கழித்த பின்னர் முழு ஞானம் பெற்றுள்ளதை உணர்ந்ததாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு அவர் அமர்ந்து தியானம் செய்தது போதி மரத்தின் அடியில்தான். எனவே போதி மரத்தை மையமாக வைத்து கி.பி 5-6 நூற்றாண்டில் இங்கு மகாபோதிக் கோயிலில் கட்டப்பட்டது. இந்த கோயில் உலகம் முழுவதும் உள்ள புத்த துறவிகளின் புனித தலமாகும். எனவே ஆண்டுதோறும் கணிசமான அளவில் வெளிநாட்டு பயணிகள் இக்கோயிலுக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் நேற்று ரஷ்ய நாட்டை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் கோயிலுக்குள் நுழைந்துள்ளார்.

ரஷ்ய துறவி
இவர் 'தந்திர சாதனா' எனும் தியானம் மூலம் அமைதியின் ஒரு பெருங்கடலை அனுபவிக்க முயன்று வரும் துறவியாவார். இந்நிலையில் கோயிலுக்குள் நுழைய முற்பட்டபோது பாதுகாப்பு அதிகாரிகள் இவரின் உடமைகளை சோதனை செய்துள்ளனர். சோதனையில் இவரிடமிருந்து 100 மில்லி அளவிலான மதுபாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 10 மில்லி அளவு விஸ்கி இருந்திருக்கிறது. இது குறித்து போத்கயா டிஎஸ்பி அஜய் பிரசாத் கூறுகையில், "வழக்கமான சோதனை நடைமுறையில் இவர் மாட்டியுள்ளார். பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகள் துறவிகளை மரியாதையாகதான் நடத்துவார்கள்.

சோதனை
எனவே இவர்களிடம் கறாரான சோதனை இருக்காது. ஆனால் ரஷ்ய துறவின் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் இவரிடம் சோதனை செய்துள்ளர். இவர் முதலில் சோதனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே அதிகாரிகள் கட்டாய சோதனை செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அப்படிதான் மதுவுடன் கூடிய மது பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது போல் எத்தனை முறை கோயிலுக்குள் மதுவுடன் அவர் நுழைந்திருக்கிறார் என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். பீகார் மாநிலத்தில் 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கிறது.

மது விலக்கு
இந்த சட்டத்தின்படி மதுபானங்கள் உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிப்பதால் அதனை மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி மது பானங்களை கடத்துவது, விற்பது, பயன்படுத்துவது போன்ற குற்றத்திற்காக குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதமும், ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த சட்டத்தின் அடிப்படையில் ரஷ்ய துறவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கும்" என்று கூறியுள்ளார்.

மது விற்பனை
பீகாரில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக மது விற்பனை மாநிலம் முழுவதும் அமோகமாக நடந்து வருகிறது. இந்த போலி மதுவால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த மது விற்பனை குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications