புதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்
இளம்பெண்ணின் சடலம் ஒன்று குளத்தில் மிதந்தது
Recommended Video
பாட்னா: புதுசா கல்யாணம் ஆன டீச்சரின் சடலம் குட்டையில்.. அழுகிய நிலையில்.. மிதந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டனர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் வேதபிரகாஷ். ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக வேலை பார்க்கிறார். இவருக்கு போன மாசம் 7-ம் தேதி அங்கிதா என்ற பெண்ணுடன் கல்யாணம் ஆனது.

அங்கிதாவுக்கு 25 வயசு.. ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறார். தம்பதி இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் போன 7-ம் தேதி அங்கிதாவை காணவில்லை. இதனால் பதறிய கணவன், மனைவியை பல இடங்களில் தேடினார். கடைசியில் வேதபிரகாஷ் அப்பகுதி போலீசில் புகாரும் செய்தார். இதையடுத்து போலீசாரும் தனிப்படை அமைத்து காணாமல் போன அங்கிதாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு குட்டையில் டீச்சரின் சடலம் மிதப்பதை கண்டறிந்தனர். அதாவது ராஞ்சி பகுதியிலிருந்து 50 மைல் தொலைவில் பர்காகனா ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த குட்டை உள்ளது.
இதனால் சடலத்தை போலீசார் குட்டையிலிருந்து மீட்டனர். ஆனால் அது அழுகிய நிலையில் கிடந்தது. பின்னர், அங்கிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிதா வீட்டில் ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனராம்.
எனவே அங்கிதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஆனால் புதுப்பெண் இப்படி குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை தந்துள்ளது.
-
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications