Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக எம்எல்ஏ வெங்கடேஷன் வீட்டில் 15 பவுன் திருட்டு.. புதுச்சேரியில் தந்தை அறைக்குள் நுழைந்து கைவரிசை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ வெங்கடேஷன் வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளது. வீட்டில் அவரது தந்தை கலியப்பெருமாள் வசிக்கும் அறைக்குள் நுழைந்தவர் பீரோவை திறந்து நகையை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பாக வீட்டில் பணியாற்றும் டிரைவர், பணிபெண்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான நாராயணசாமி முதல்வராக உள்ளார். புதுச்சேரி சட்டசபைக்கு எம்எல்ஏக்கள் 2 முறைகளில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

15-sovereign-gold-theft-in-puducherry-bjp-mla-venkatesan-house

ஒன்று தேர்தலில் மக்களால் ஓட்டளித்து எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இன்னொன்று எம்எல்ஏ நியமனம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏவாக இருப்பவர் வெங்கடேஷன்.

எம்எல்ஏ வெங்கடேஷனின் வீடு வீடு நகரின் மையப்பகுதியாக இருக்கும் முத்துமாரிஅம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ளது. வீட்டின் முதல் மாடியில் எம்எல்ஏ வெங்கடேஷனின் தந்தை கலியப்பெருமாள் வசித்து வருகிறார். அவர் முதியவராக உள்ளார். இதனால் வீட்டில் வேலைக்காரர்கள், டிரைவர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் அவரது வீட்டு பீரோவின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த டிரைவர் உடனடியாக கலியப்பெருமாளிடம் தெரிவித்தார். குடும்பத்தினர் வந்து பீரோவை பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது. இதையடுத்து குடும்பத்தினர் வீட்டின் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர்.

அப்போது தங்க சங்கிலி கிடைக்கவில்லை. அப்போது தான் யாரோ அதனை திருடி சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து எம்எல்ஏ வெங்கடேஷனின் மகன் பாலாஜி சார்பில் பெரியக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் எம்எல்ஏ வெங்கடேஷனின் தந்தை கலியப்பெருமாள் இருக்கும் அறைக்குள் வெளியாட்கள் யாரும் சாதாரணமாக நுழைய முடியாது. இதனால் நன்கு தெரிந்த ஆட்கள் தான் கலியப்பெருமாள் இல்லாத நேரம் பார்த்து பீரோவை திறந்து தங்க சங்கிலியை திருடி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இதனால் வீட்டில் பணியாற்றும் 2 டிரைவர்கள், பணிப்பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+