நைட்டு 2 மணிக்கு.. கடைக்குள் நுழைந்த ஆசாமி.. ஜஸ்ட் 5 நிமிசம் தான்.. அலறிய புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள மதுபானக்கடையை நள்ளிரவில் மர்ம நபர் உடைத்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அள்ளிச்செல்லும் சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
Recommended Video
கொரோனா காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை குறித்து வைத்து குடிமகன்கள் திருடிய சம்பவத்தை பார்த்திருப்போம். மதுபாட்டில்களை எப்படியாவது குடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் பலரும் மதுக்கடைகளை உடைத்து திருடினார்கள்.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் நடந்தன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்தி புதுச்சேரியில் திருட்டு சம்பவங்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுக்கடை உடைப்பு
அந்த வகையில் புதுச்சேரி நடேசன் நகரில் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையை உரிமையாளர் இரவு பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையினர பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கள்ளாபெட்டியில் இருந்த பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது.

நள்ளிரவு 2 மணி
இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் படி ரெட்டியார்பாளையம் போலிசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் இருந்த சிசிடிவை ஆய்வு செய்த போது நள்ளிரவு 2 மணியளவில் கடையை உடைத்து உள்ளே வந்துள்ளான் கெள்ளையன்.

அள்ளிய கொள்ளையன்
கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளி செல்லும் சிசிடிவி கேமரா காட்சி பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையனை புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

என்ன காட்சி
சிசிடிவி கேமராவை பற்றி கவலைப்படாமல் முகத்திற்கு மாஸ்கு கூட அணியாமல் சர்வசாதாரணமாக பாலத்தீன் கவரை தேடி எடுத்து பணத்தை அள்ளிப்போட்டு செல்கிறார் அந்த கொள்யைன். இந்த விடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications