3 லட்சம் டீல்.. பொதுப்பணித்துறை பொறியாளருக்கு கூலிப்படை மூலம் ஸ்கெட்ச்.. சிசிடிவி மூலம் அம்பலம்!
புதுச்சேரியில் ஒப்பந்த தகராறில் பொதுப்பணித்துறை பொறியாளரை ரூபாய் 3 லட்சம் கொடுத்து கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒப்பந்த தகராறில் பொதுப்பணித்துறை பொறியாளரை ரூபாய் 3 லட்சம் கொடுத்து கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(54). புதுச்சேரி அரசின் பொதுபணித்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் செல்வராஜ் வீடு திரும்பிகொண்டிருந்தார்.

அப்போது சக்திநகர் பகுதியில் சென்ற போது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.
இதில் செல்வராஜிக்கு தலை, கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சாலையில் மயங்கி கிடந்த செல்வராஜை, போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலை, அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், செல்வராஜை தாக்கியது கூலிப்படையாக செயல்பட்டு வரும் செயின்ட்பால்பேட் நிவாஸ், ஜீவானந்தபுரம் தமிழ், சந்துரு, அருண், கிஷோர் என்பதும், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசின் நகராட்சி கட்டிட பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி கூலிப்படையை ஏவி தாக்கியதும் தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தியின் கார் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து சுபாஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், புதுச்சேரி கடற்கரை சாலையில் நகராட்சி கட்டிடம் கட்டுமான பணி பொதுப்பணித்துறை பொறியாளர் செல்வராஜ் மேற்பார்வையில் நடந்து வந்ததாகவும், இந்த கட்டிட கட்டுமான பணியை ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி மேற்கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கட்டுமான பணிகளில் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி இடையே பிரச்சினை இருந்து வந்ததும், இதனால் செல்வராஜை தீர்த்துகட்டச் சொல்லி கார் ஓட்டுநர் சுபாஷிடம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதன்படி ரூபாய் 3 லட்சம் கொடுத்து கூலிப்படை மூலமாக பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியுள்ளனர்.

கார் ஓட்டுநர் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கூலிப்படையை சேர்ந்த நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications