புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜய்க்கு ஆதரவு.. சீக்கிரமே பதவி ஏற்பார்.. ஆட்சி அமையும் என பேட்டி
புதுச்சேரி: அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க சிரமப்படுவது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பதில் அளித்த அவர், விஜய்க்கு வாழ்த்துகள்.. சீக்கிரமே அவர் பதவி ஏற்பார்.. அவருடைய ஆட்சி அமையும் என முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்.
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. புதுச்சேரியில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதிகளில் என மொத்தம் 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. முதல்வராக ரங்கசாமி 5-வது முறை பதவியேற்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து பதினைந்தாவது சட்டம் பேரவை கலைக்கப்பட்டு வெற்றி பெற்ற புதிய 30 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் அரசு இதழில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை இன்று காலை 11.25 மணிக்கு சந்தித்து அளித்தார்.
புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக இருக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார் .. இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த முதலமைச்சர் ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநர் கொடுத்துள்ளேன்.. விரைவில் புதிய அரசு பதவியேற்கும்.. தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோரும் ம் கடிதம் கொடுப்பேன் என்றார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க சிரமப்படுவது குறித்து கேட்டதற்கு விஜய்க்கு வாழ்த்து.. சீக்கிரமே அவர் பதவி ஏற்பார்.. ஆட்சி அமையும் என முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்தார்.
புதுச்சேரியில் கடந்த முறை போலவே இந்த முறையும் சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதா 4 தொகுதிகளிலும், கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதிகளிலும், நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை விக்னேஸ்வரனையும் சேர்த்து தங்களுக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக பாஜக கூறியிருக்கிறது. ஆனால் ரங்கசாமியோ, ஒரு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் பதவி மட்டுமே வழங்க முடியும் என்று கூறி வருகிறார். இதனால் பாஜக தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications