Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரி தேர்தலை புறக்கணிக்க தயார்... துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்து.. ரங்கசாமி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தனக்குத்தான் அதிகாரம் என்று சற்று மாறுபட்ட நிலையில் துணைநிலை ஆளுநர்கள் செயல்படுவதாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த முதலமைச்சர் ரங்கசாமி கடுமையாக சாடினார். மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா என்று எதிர்க்கட்சி தலைவரை பார்த்து கேள்வி எழுப்பினார்? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம் என்றும் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 3-வது பகுதி இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் திருக்குறளை வாசித்து பேரவை தொடங்கி வைத்தார், தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்எல்ஏ சுப்புராயன், முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி,மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் ஆகியோர் மறைவிற்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது, மேலும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள சிலம்பாட்ட கலைஞர் பழனிவேலுக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Chief Minister Rangasamy strongly criticizes the authority of the Lieutenant Governor of Puducherry

இதனையடுத்து இதில் ஐந்து மாத செலவுகளுக்கான 5,396 கோடி ரூபாய் காண இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

தொடர்ந்து புதுச்சேரி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், சட்டசபையில் எதிர்கட்சிகள் மாநில அந்தஸ்து பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ளது பற்றி பேச வேண்டும் என வலியுறுத்தினார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.தலைமை செயலர் மதிப்பதில்லை. புதுச்சேரி எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணி தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கம் செய்யவில்லை.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி.. மாநில அந்தஸ்து மிக மிக அவசியம்.. 1991 ல் இருந்து சட்டமன்றத்திற்கு வருகிறேன்.. அப்போது இருந்த துணைநிலை ஆளுநர்களின் நிலை வேறு, இப்போது சற்று மாறுபட்ட நிலையில் "தனக்கு தான் அதிகாரம்" என துணைநிலை ஆளுநர்கள் உள்ளனர், சங்கடமான நிர்வாக சூழ்நிலையில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்,சிலவற்றை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதனிடையே விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசுகையில், மாநில அந்தஸ்துக்காக டெல்லிக்கு அழைத்து செல்வோம் என கூறினீர்கள். ஆனால் செய்யவில்லை. உங்களை நம்பி மக்கள் வாக்களித்தனர். மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயாரா? என்று முதல்வர் ரங்கசாமியை பார்த்து கேள்வி எழுப்பினார்.

அப்போது முதல்வர் ரங்கசாமி குறுக்கிட்டு, தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம் என்றார். கூட்டத்தின் இறுதியில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள் என்றார்

இதனை அடுத்து சட்டப்பேரவையை சபாநாயகர் செல்வம் காலை வரை இன்றி ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். இன்று காலை 9:38 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை 11:54க்கு நிறைவடைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+