காகிதங்கள் இனி தேவையில்லை... புதுச்சேரி சட்டப்பேரவை கணினிமயமாகிறது
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும், காகிதமில்லாமல் மின்னணு முறையில் நடத்துவது மற்றும் முற்றிலும் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் கணினிமயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டப்பேரவை செயலக பணியாளர்களுக்கு புதுச்சேரி அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை செயலர் உள்ளிட்ட ஏராளாமன அதிகாரிகள் பங்கேற்றனர்.

காகிதமில்லா பேரவை நடத்துவது தொடர்பாக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் கூறுகையில், பேரவையில் காகிதமில்லா முறையை அமுல்படுத்தும் போது, பேரவை கூட்டத்திற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, அவற்றை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, ஆன்லைன் மூலம் பதில் பெறப்படும் என்றும்,

பேரவையில் உறுப்பினர்கள் பேசுவதை அப்படியே மின்னணு முறையில் பதிவு செய்யவும், பேரவையில் ஓட்டெடுப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை உறுப்பினர்கள் மின்னணு முறையிலே கையால முடியும் என்றும், அலுவல் ஆய்வு நடைமுறைகளை ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ளும் வசதியும் உருவக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் பணிகளின் நேரம் மற்றும் காகிதப் பரிமாற்றம் குறையும் என வின்சென்ட் ராயர் தெரிவித்தார்.

இதற்கிடையில், புதுச்சேரியில் வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதால் இனி கால அவகாசம் வழங்க முடியாது என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார். இதனால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications