இனிமே நானும் சிக்கனமா இருக்க போறேன்..கிரண்பேடி சொன்ன சூப்பர் காரணம்
புதுச்சேரி: குடியரசுத்தலைவர் மாளிகையை போல் புதுச்சேரி மாநில ராஜ்நிவாஸும் அனைத்து செலவுகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவித் ஓர் ஆண்டுக்கு தனது ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து நிகழ்ச்சிகள், பூக்கள், அலங்காரம், உணவு உள்ளிட்டவற்றை குறைத்து, நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.


இதனை தொடர்ந்து குடியரசுத்தலைவர் மாளிகையை போல் புதுச்சேரி மாநில ராஜ்நிவாஸும் அனைத்து செலவுகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிரண்பேடி தெரிவித்துள்ள கருத்தில்,
புதுச்சேரியில் உள்ள அனைத்து துறைகளும் சேமிப்பு செலவுகளை குறைத்தல் என குடியரசுத்தலைவர் சிக்கன நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்துகிறேன். நடப்பு ஆண்டு திட்டமிட்டப்பட்ட சம்பளம், ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி, ஏழைகளுக்கு இலவச அரிசி போன்ற அடிப்படையில் செலவுகள் இருக்க வேண்டும். இதுவரை பணத்தை இழந்து வரும் சேவைகளில் இருந்து வருமானத்தை திரட்டவேண்டும். இதுபற்றி அனைத்து துறைகளும் ஏற்கனவே எச்சரிக்கையாக உள்ளன.

குடியரசுத்தலைவர் மாளிகையை போல் ராஜ்நிவாஸும் அனைத்து செலவுகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றும். ஏற்கெனவே தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறப்படும் சமூக பொறுப்புணர்வு நிதியை சமூக நிகழ்வுகளுக்கு செயல்படுத்துவதின் மூலம் நிதி செலவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி டெல்லி அலுவலகத்துக்கு புதிய கார் வாங்க மறுத்தேன். கார் வாங்குவதை தொடர வேண்டாம் என்று கொரோனா சூழல் உருவாகும் முன்பே தெரிவித்துவிட்டேன். அதேபோல் எனது மாத ஊதியத்தில் மூன்றில் ஒருபங்கை பிரதமர் நிதிக்கு நன்கொடையாக தரப்படுகிறது.


குடியரசுத்தலைவர் முழு நாட்டுக்கும் சரியான முன்மாதிரி திட்டத்தை முன் வைப்பதை கண்டு நான் மகிழ்வடைகிறேன். இது பல சவால்களை கூட்டாக எதிர்கொள்ள உதவும் என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications