எந்த லிஸ்ட்ல வெச்சிருக்காங்கன்னு தெரியல.. செஸ் ஒலிம்பியாட்டுக்கு அழைக்கல - சிரித்தபடி சொன்ன தமிழிசை
புதுச்சேரி: சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.
186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர். பலர் ஏற்கனவே சென்னைக்கு வருகை தந்து இருக்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட்
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டு உள்ளது தமிழ்நாடு அரசு.

பிரதமர் மோடிக்கு அழைப்பு
இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 28 ஆம் தேதி சென்னை வர உள்ளார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் லட்சினையான "தம்பி" என பெயரிடப்பட்டு உள்ள குதிரை சிலையை வழங்கினர்.

தமிழிசை பேட்டி
இதேபோல் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், "செஸ் ஒலிம்பியாட் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் ஒன்று. இது உலகம் எங்கும் தமிழ் கலாச்சாரத்தை கொண்டு சேர்க்கும் முயற்சி.
Recommended Video

என்னை அழைக்கவில்லை
பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைப்பது பெரும் மகிழ்ச்சி. இன்னும் மாணவர்கள் விளையாட்டில் பங்குபெற வேண்டும். அதுவும் குறிப்பாக செஸ் மூளைக்கு கொடுப்பது. இதற்கு எனது வாழ்த்துக்கள். அழைப்பை அனைவருக்கும் கொடுக்கிறார்கள். எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. எந்த லிஸ்டில் என்னை வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில், இந்தியாவில் எது நடந்தாலும் எனக்கு பெருமை." என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications