ஆமா.. திமுக ஆட்சியில் வாழ்வது கருணாநிதி குடும்பம் மட்டும் தான்! விமர்சித்த மோடிக்கு, உதயநிதி பதிலடி
புதுக்கோட்டை: திமுக ஆட்சியில் தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் வாழ்கிறது என பிரதமர் விமர்சனம் செய்தற்கு ‛ஆமாம்' என ஒப்புக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடைசியில் ட்விஸ்ட் வைத்து மோடியை விமர்சனம் செய்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதில் பல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் தற்போது ‛இந்தியா' கூட்டணி உருவாகி உள்ளது.

இந்த கூட்டணி உருவானது முதல் பிரதமர் மோடி உள்பட பல பாஜக தலைவர்கள் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ஸ்மிருதி இரானி உள்பட பல தலைவர்கள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் பிரதமர் மோடி திமுகவை விமர்சனம் செய்தபோது, ‛‛தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் வாழ்கிறது. இதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'' என விமர்சனம் செய்து இருந்தார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதாவது புதுக்கோட்டை திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சிஏஜி அறிக்கைக்கு பின் மத்திய அரசின் பல துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 'ரமணா' பட பாணியில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கியதாக கணக்கெழுதி மத்திய அரசு ஊழல் செய்துள்ளது. 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பலனடைந்த ஒரே குடும்பம் அதானியின் குடும்பம் மட்டுமே
மேலும், நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்க களமிறங்கியிருக்கும் முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த சேலத்தில் ஒன்று திரள்வோம். பிரதமர் குற்றம் சாட்டுவது போல, திமுக ஆட்சிக்கு வந்தால் வாழ்வது கருணாநிதி குடும்பம் தான். ஏனெனில் இங்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் கருணாநிதி குடும்பம் தான்'' என தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணியின் மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications