சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை!
சென்னை: தவெக மீது சிலர் குற்றம்சாட்டுகிறார்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தெரு நாய்கள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பீடு கொடுத்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ராகவா லாரன்ஸ் கடந்த சில நாட்களாகவே அரசியலில் நுழைவது குறித்து பேசி வருகிறார். அவரது பேச்சு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

அவர் பேசியதாவது, "கடந்த ஒரு மாதமாக இந்த அரசு என்ன செய்கிறது, அவர்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த அரசு ரொம்ப நன்றாக இருக்கிறது. சூப்பராக இருக்கிறது.
அதற்கு முக்கியமான காரணம் உண்டு. அரசின் செயல்பாட்டில் ஒரு விஷயம் என்னை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்தது. கோயில்கள் முன் இருக்கும் மதுக்கடைகள், பள்ளிக்கூடத்திற்கு முன்னாடி இருக்கும் மதுக்கடையை மூடியது மிகவும் பிடித்திருந்தது. கல்வித்துறை அமைச்சருடைய நடவடிக்கை, அறநிலையத்துறை அமைச்சரின் நடவடிக்கை எல்லாம் வீடியோவில் உங்களை மாதிரி தான் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அரசுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுகிறது. புதிய ஏரியாவில் வாடகை வீட்டுக்கு போகிறோம் என்றால், அந்த வாடகை வீடு வெளியே பார்க்கும்போது நன்றாக இருக்கும். வீட்டுக்குள் போனால் தான் எங்கே பைப் சரி இல்லை, எங்கே ஃபேன் சுத்த வில்லை, எந்த இடத்தில் பெயிண்ட் கொட்டுகிறது என்று தெரியும். ஒரு வீட்டுக்கு போவதற்கே அப்படி இருக்கிறது.
ரோட்டில் இருக்கக்கூடிய தெருநாய் கூட நம்மை பார்த்தால் 'யார் அது புது ஆள் வந்திருக்கிறார்கள்' என்று கத்தும். அந்த தெரு நாய்க்கு புடிச்ச பிஸ்கட் போட வேண்டும், ஒரு சில தெருநாய்கள் எல்லாம் பிஸ்கட் சாப்பிடாது, நான்வெஜ் தான் சாப்பிடும். அதற்கு பிடித்த மாதிரி செய்து போட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாய்க்கு, ஒரு வீட்டுக்கு இவ்வளவு ஆகிறது என்றால்... ஒரு நாட்டை கொடுக்கும் பொழுது அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
அப்படியெனில் விமர்சகர்களையும், அரசின் செயல்பாடுகளையும் கேள்வி எழுப்பும் நபர்களையும் தெருநாய்கள் என்று லாரன்ஸ் கூறுகிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
-
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications