ஒரு பங்சுவாலிட்டி இல்ல.. எம்பிக்கள் குழுவை கதறவிட்ட புதுச்சேரி தலைமை செயலாளர்!
புதுச்சேரி: புதுச்சேரி தலைமைச் செயலாளர், ஜஜி ஆகியோர் வராததால், பழங்குடியின மக்கள் நலன் பற்றி ஆய்வு செய்யும் எம்பிக்கள் குழுவினர் பாதியிலேயே ஆலோசனை கூட்டத்தை முடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலன் பற்றி ஆய்வு செய்யும் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் 11 பேர் அடங்கிய குழு புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

இவர்கள் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் முகாமிட்டு, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அரசு சார்பில் அந்த மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் ஆய்வின் அடிப்படையில், புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு நாடாளுமன்ற எஸ்சி, எஸ்டி குழு தலைவர் டாக்டர் கிரித் சோலங்கி தலைமை வகித்தார்.
புதுச்சேரி அரசு செயலர்கள் அன்பரசு, பத்மா ஜெய்ஸ்வால், ஆலிஸ்வாஸ் , அசோக்குமார், பிரசாந்த்குமார் பாண்டா, அருண், மகேஷ், பிசிஆர் பிரிவு எஸ்பி பாலகிருஷ்ணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியபோது குழு தலைவர் டாக்டர் கிரித் சோலங்கி, மாநிலத்தின் தலைமைச் செயலாளர், போலீஸ் ஐஜி ஏன் கூட்டத்திற்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதோடு அவர் விட்டுவிடாமல், உங்கள் மாநிலத்தின் நலனுக்காக மத்தியில் இருந்து எம்பிக்கள் குழு நாங்க வந்துள்ளோம்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் கூட தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்களா? என தொடர்ந்து சராமாரியாக கேள்விகளை எழுப்பிகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் தலைமை செயலாளர் வராததால் கோபமடைந்து கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு, கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினார்.

இதையடுத்து அரசு செயலர்கள் தலைமைச் செயலருக்கும், போலீஸ் ஜஜிக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து ஜஜி சுரேந்திர சிங் யாதவ் அங்கு உடனடியாக வந்தார். இதனைதொடர்ந்து எம்பிக்கள் குழுவை அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், அக்குழுவினர் ஏற்கவில்லை. இதனால் கூட்டம் நடைபெறாமல் ரத்தானது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications