புதுச்சேரியின் பல இடங்களில் இரவு முழுக்க மின் தடை.. மக்கள் போராட்டம்.. போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், கடலூர் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, போக்குவரத்தும் தடைபட்டது.
Recommended Video
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புரேவி புயல் காரணமாக கடந்த 2 தினங்களாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வகையில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட இந்திராநகர், புது நகர், மாரியம்மன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நேற்று பிற்பகலில் இருந்து இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் இருளால் சூழப்பட்டது. நீண்ட நேரமாகியும் மின் தடை சரிசெய்யப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென திருபுவனையில் புதுச்சேரி விழுப்புரம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதே போல் முதலியார்பேட்டை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின் இணைப்பை உடனடியாக வழங்க கௌரி புதுச்சேரி கடலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications