இந்தாப் பிடிங்க அரசுக் கார்களை.. அதிரடியாக ஒப்படைத்த புதுவை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!
Recommended Video
புதுச்சேரி: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புதுச்சேரியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களது கார்களை சட்டசபை செயலரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நகரில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதேபோல் அரசியல் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகளையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசு கார்களை அரசு நிகழ்ச்சிகள் தவிர மற்ற பயன்பாட்டிற்கு உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பயன்படுத்திவந்த அரசு கார்களை சட்டப்பேரவை செயலரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இதன்படி ஒப்படைக்கப்படும் கார்கள் அனைத்தும் சட்டமன்ற வளாகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த கார்களிலேயே தற்போது பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.