கிரண்பேடி தொல்ல தாங்கல.. சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சுகாதாரத் துறை அமைச்சர்..
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக கூறி கருப்பு உடை அணிந்து சட்டமன்ற வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. இந்த தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த இரண்டு வருடங்களாக அரசின் திட்டங்களுக்கான கோப்புகளை அனுப்பி வைத்தால் அதை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றார். அரசு அதிகாரிகள் துணைநிலை ஆளுநரின் பேச்சை கேட்டு அரசுக்கு ஒத்துழைப்பதில்லை.
மற்ற நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஏன் நேரில் சென்று சந்திக்கவில்லை.

புதுச்சேரி மாநில பிராந்தியமான ஏனாமில் இருந்து பிற மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் ஊரடங்கால் 16 நாட்கள் நடந்தே வந்துள்ளனர். அவர்களை வைரஸ் பரிசோதனை செய்து ஏனாம் பகுதிக்கு அனுமதிக்காமல் எல்லையில் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு கிரண்பேடி உத்தரவிட்டுள்ளதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கில் இது போன்ற செயல்களில் கிரண்பேடி ஈடுபடுவதாக தெரிவித்திருந்த அமைச்சர், அடுத்த 24 மணி நேரத்தில் ஏனாமில் அனுமதிக்கவில்லை என்றால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட 14 தொழிலாளர்களை எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக குற்றம்சாட்டியும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் சபாநாயகர் சிவகொழுந்துவிடம் கிரண்பேடி மீது புகார் மனு அளித்து, கருப்பு சட்டை அணிந்து சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
அமைச்சரின் தர்ணா போராட்டம் காரணமாக சட்டப்பேரவையில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications