ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம்.. மல்லாடி வேதனை!
புதுச்சேரி: ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம் உள்ளதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வேதனை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி மாநிலத்தில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர், மாஹேவைச் சேர்ந்த ஒருவர் ஆவர். மேலும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரியில் இதுவரை 4 லட்சத்து 13 ஆயிரத்து 515 குடும்பங்களுக்கு வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா என சோதனை செய்யப்பட்டுள்ளன. 3,155 பேருக்கு கோரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3,097 பேருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. மீதமுள்ள 46 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது.

இதுவரை 41 நாட்கள் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை சிறந்த முறையில் பணியாற்றியுள்ளனர். ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த தளர்வினால் பல பிரச்சனைகள் சுகாாதரத்துறைக்கு வரும் என்று கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே நான் தெரிவித்திருந்தேன்.

நேற்று கூட இந்த பிரச்சனை குறித்து முதல்வரிடம் கூறினேன். புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகம், ஆந்திரா, கேரளா பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை அதிகளவில் உள்ளது. குறிப்பாக புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 86 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடந்த 39 நாட்களில் 39 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நேற்று ஒரே நாளில் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு மாவட்டங்களிலும் மொத்தமாக 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் தொற்று அதிகரிக்கின்ற வாய்ப்புள்ளது.

இன்று காலை 5 மணி முதல் கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரிக்கு காய்கறி சரக்கு வாகனங்களில் வந்தவர்கள் 40 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 70 பேர் மொத்தம் 110 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஊரடங்கு சில கட்டுப்பாடுடன் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம் உள்ளது.
இது தொடர்ந்தால் பச்சை மண்டலமாக மாறுவது கடினம். எனவே கொரோனாவை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications