ஒரே அறையில் காரைக்கால் விதவை பெண் காயத்ரி, வாலிபர் .. இருந்த கோலத்தை கண்டு ஆடிப்போன உறவுகள்
புதுச்சேரி: புதுச்சேரி: காரைக்கால் மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந் காயத்ரி என்பவர் விதவை ஆவார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அந்த பகுதியில் ஒரு இட்லி கடை நடத்தி வருகிறார். காயத்ரிக்கும், அவரது உறவினர் காளிதாஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தனர். இதற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விதவை பெண் மற்றும் வாலிபர் ஒரே மின்விசிறியில் அடுத்தடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் உறவினர்களை ஆடிப்போக வைத்தள்ளது.
விதவை பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களை பெற்றோர்கள் எதிர்ப்பது அதிகமாக இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பையன் விதவை பெண்ணை காதலிப்பதை வெறுக்கிறார்கள்.திருமணம் ஆகி கைவிடப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொண்டால் சமூகம் என்ன சொல்லும் என்று தயங்குகிறார்கள். இது இன்னமும் கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் அதிகமாக இருக்கிறது.

காரைக்கால் மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த 38 வயதாகும் காயத்ரி அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் மாணிக்கம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் மாணவிக்கம் உடல் நலக்குறைவால் காலமானார். அதன்பிறகு தனி ஆளாக காயத்ரி இட்லி கடை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் காயத்ரிக்கும், அவரது உறவினர் காளிதாஸ் அவ்வப்போது சிறிய உதவிகளை செய்து வந்ததில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தனர்.
ஆனால் இதற்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் காளிதாசின் பெற்றோர் அவருக்கு உடனே திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதனால் காதலர்கள் இருவரும் வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காயத்ரி வீட்டுக்கு வந்த காளிதாஸ், சிறிது நேரம் பேசிவிட்டு இரவு 10.30 மணிக்கு தோசை ஊற்றி தரும்படி கேட்டாராம். அதன்படி தோசை ஊற்ற காயத்ரி சமையல் அறைக்கு சென்ற நிலையில், மற்றொரு அறையில் இருந்து திடீரென்று சத்தம் வந்தது. உடனே அங்கு சென்றுபார்த்தபோது காளிதாஸ் மின்விசிறியில் உயிரையே விட்டுவிட்டார்.
கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கி மீண்ட கல்லூரி மாணவர்.. இரண்டாவது முறையாக வந்த எமன்.. இப்படியுமா?
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், காளிதாசை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் காளிதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் காயத்ரி சோகத்துடன் காணப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பிய அவர், காளிதாஸ் தூக்கில் தொங்கிய அதே மின் விசிறியில் தூக்குப்போட்டு உயிரை விட்டு விட்டார்-இது குறித்து காயத்ரியின் அண்ணன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விதவை பெண், வாலிபர் அடுத்தடுத்து ஒரே மின்விசிறியில் உயிரை விட்ட சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications