Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொறுமையா இருக்கோம்.. ஆளுநர் விவகாரத்தில் முதல்வர் தெளிவான முடிவு எடுப்பார்.. அமைச்சர் ரகுபதி உறுதி!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியைப் போன்று செயல்படுகிறார் என்றும், ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரை முதலமைச்சர் தெளிவான முடிவை எடுப்பார் என்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைப் பணிகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, சட்டசபையில் எந்த தீர்மானம் வேண்டுமென்றாலும் நிறைவேற்றலாம். ஆனால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாகாது. தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள். சட்ட மசோதா நிலுவையில் உள்ளது என்றால் அது நிராகரிக்கப்படுகிறது என்று அர்த்தம் எனப் பேசியது சர்ச்சைக்குள்ளானது.

Chief Minister will take a clear decision on Governor issue: says law minister Raghupathi

இந்நிலையில், இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற 3 புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, "தமிழ்நாடு அரசின் மசோதாவை நிலுவையில் வைத்தால் நிராகரிப்பதாகத்தான் அர்த்தம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இவ்வாறு ஆளுநர் பேசுவது அரசியல் சட்ட வரையறையை மீறிய செயல் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஆளுநர் அரசியல்வாதியைப் போன்று செயல்பட்டு வருகிறார். இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது குறித்து மக்கள்தான் தீர்ப்பு அளிப்பார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த நிதி பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பது குறித்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். அவர்களின் கருத்துதான் எனது கருத்தும்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, "தமிழ்நாடு எப்போதும் பொறுமையைக் கடைபிடிக்கக்கூடிய மாநிலம். கருத்து மோதல்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் அனுசரித்து போகக்கூடிய மாநிலம். எனவே, ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதல்வர் தெளிவான முடிவை எடுப்பார்" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+