அறந்தாங்கியில் தெறிக்க விட்ட தேமுதிகவினர்.. கூட்டணி உடைந்ததற்காக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
புதுக்கோட்டை: அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டியுள்ளனர்.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அறந்தாங்கி நகர தேமுதிகவினர் சார்பில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சி, தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
இதையடுத்து, தேமுதிகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி நகர தேதிமுக நகரசெயலாளர் மணிகாந்த் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகரச் செயலாளர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினர் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட்டு அவர்களை டெபாசிட் இழக்கச் செய்வோம். அதோடு மட்டுமல்லாமல் எங்களது தலைவர் அவர்கள் கரத்தை வலுப்படுத்தி தமிழக முதல்வரக்குவோம் இந்த தேர்தலில் தான் எங்களது பலம் தெரியும் என கூறினார்.

நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள் நைனாமுகமது,காந்தி, ஆனந்த்,பிரபு உட்பட நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications