கொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: கொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் அவசியம் அரசுக்கு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை நகர பகுதிகளில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு ,எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வழங்கினார். அப்போது பொதுமக்களிடம் விஜயபாஸ்கர் பேசியதாவது:
5 மைக்ரோ பிளான்.. ராதாகிருஷ்ணன் களமிறக்கும்
மக்களும் அதிமுக அரசும்
அதிமுக அரசு மக்கள் மீது எப்போதுமே பாசமாக இருக்கும். அதே போன்று மக்களும் அதிமுக மீது எப்போது பாசமாக இருப்பார்கள். பொதுமக்கள் ஒரு துயரத்தில் இருக்கும்போது அவர்களோடு எப்போதும் துணை நிற்பது அதிமுக தான், அதிமுக அரசுதான் எப்போதும் மக்களுக்கு துணையாக இருக்கும்.
முக கவசம் முக்கியம்
மற்றவர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு மக்களை மறந்துவிடுவார்கள். பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
உயிரிழப்பு மறைப்பா?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை தமிழக அரசு மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூற வேண்டாம்.
களத்தில் இருக்கிறோம்
ஏனெனில் கேள்வி கேட்பது அனைவருக்குமே சுபலமானது. ஆனால் களத்தில் இருந்து போராடுகிறபோதுதான் அதனுடைய வலியை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.