முதல்வர் ஸ்டாலினை பார்க்க சென்றபோது சோகம்.. கண்ணீர் செய்தியைக் கேட்டு உடனடி ஆக்ஷன் எடுத்த கலெக்டர்!
புதுக்கோட்டை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்க வந்த கைம்பெண் கூட்ட நெரிசலில் தள்ளிவிடப்பட்டதால் அவரால் முதல்வரிடம் தனது கோரிக்கை மனுவை அளிக்க முடியவில்லை.
கொரோனாவால் கணவனை இழந்த அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கண்ணீர் விட்டு அழுது தனது வேதனையைத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அப்பெண்ணை அழைத்துப் பேசி, அவருக்கு வேலையும், அவரது தாயாருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தையும் உறுதி செய்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர், புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு 81.13 கோடி மதிப்பிலான 138 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் ஸ்டாலின்
புதுக்கோட்டை வந்த முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக ரோஜா இல்லம் முன்பு கோரிக்கை மனுவோடு சோலைமலர் என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் காத்திருந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அங்கு வந்தபோது கூட்ட நெரிசலில் பாதுகாவலர்கள் அப்பெண்ணை கீழே தள்ளியுள்ளனர். இதனால் அவரால் கோரிக்கை மனுவைக் கொடுக்க முடியவில்லை. இதனை கவனித்த பாதுகாவலர் ஒருவர் சோலைமலரையும், இரண்டு குழந்தைகளையும் தூக்கி விட்டுள்ளார்.

கண்ணீர் விட்ட பெண்
சோலைமலர் தனது கோரிக்கை மனுவை முதல்வரிடம் கொடுக்க முடியாமல் போனதால் கலங்கியுள்ளார். அங்கிருந்த செய்தியாளர் ஒருவரிடம் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார். அப்போது, எனது கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். எனக்கு தந்தையும் இல்லை, சகோதரர்களும் இல்லை. இரண்டு குழந்தைகளுடன் வருமானமின்றி, தங்கை ஆதரவுடன் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு இளம் பட்டதாரி. எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சரை சந்திக்க வந்தேன். இரு குழந்தைகளுடன் வந்த என்னை பாதுகாவலர்கள் பிடித்து கீழே தள்ளிவிட்டனர்" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

மாவட்ட கலெக்டர்
இந்தச் சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனே சோலைமலரை நேரில் அழைத்து அவரது கோரிக்கையைக் கேட்டறிந்துள்ளார். பிறகு உடனடியாக சோலைமலருக்கு தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியர் வேலையை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார். மேலும் அப்பெண்ணின் தாய்க்கு மாத ஓய்வூதியத்தையும் உறுதி செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

பொதுமக்கள் பாராட்டு
முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்த கைம்பெண் பாதுகாவலர்களால் நெரிசலில் தள்ளிவிடப்பட்டு, முதல்வரை சந்திக்க முடியாமல் போன நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் இந்த துரித நடவடிக்கையை புதுக்கோட்டை மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications