ஆசனவாய் வழியாக பாட்டில்.. புதுக்கோட்டையே ஆடிப்போச்சு.. அரசு மருத்துவர்கள் செய்த சூப்பர் சம்பவம்
புதுக்கோட்டை: தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது வயிற்றில் குளிர்பான பாட்டில் இருந்தது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட, பேச்சு திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர் தீராத வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் ஆசனவாயிலிருந்து ரத்தம் தொடர்ந்து வேளியேறி வந்தது. இதனையடுத்து இவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றில் முழு குளிர்பான பாட்டில் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதை பார்த்து அதிர்ந்துபோன மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இந்த சிகிச்சைக்கு மாற்றுத்திறனாளி நோயாளியை தயார்ப்படுத்த மிகவும் சிரமப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் ஒருவழியாக இவரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு தயார்ப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து முழு பாட்டிலையும் மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர். இருப்பினும் மாற்றுத்திறனாளியின் குடல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் இந்த பிரச்னையும் சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது மாற்றுத்திறனாளியான இவரது உடலுக்குள் வேறு யாரேனும் பாட்டிலை நுழைத்தார்களா? அல்லது இவரே இது போன்ற செயலில் ஈடுபட்டாரா என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி மாற்றுத்திறனாளி நபரே தனது ஆசனவாய் வழியாக பாட்டிலை நுழைத்துக்கொண்டார் என்பது தெரியவந்திருக்கிறது. இருப்பினும் இதன் உண்மை தன்மையை காவல்துறையினர் சோதித்து வருகின்றனர்.
துப்பாக்கி படத்தில் வருவதை போல மனித உடலுக்குள் பாட்டிலை நுழைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கர்பப்பை கட்டி, ரத்தக்கட்டி போன்ற சிக்கலான பிரச்னைகளை புதுக்கோட்டை மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து சாதித்துள்ளனர். அந்த வகையில் தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளி நபரின் உடலிலிருந்து முழு குளிர்பான பாட்டிலை அகற்றி மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications