Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20% கட்டிங்.. இந்தியாவிலேயே ஊழல் ஆட்சி திமுகவின் ஆட்சி தான்.. புதுக்கோட்டையில் அமித்ஷா அட்டாக்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: ‛‛ ஒட்டுமொத்த நாட்டிலேயே எங்காவது மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் நிறைந்த ஆட்சி என்று சொன்னால் அது திமுகவின் ஆட்சி தான். தேர்தல் அறிக்கையிலேயே மிககுறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஆட்சி திமுகவின் ஆட்சி தான். ஊழல் நிறைந்த அமைச்சர்கள், அமைச்சரவையை வைத்து கொண்டு தமிழ்நாடு வளர்ச்சி காண முடியுமா? தமிழ்நாட்டில் 20 சதவீதம் கட்டிங் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது வரவு செலவு அறிக்கை கடன் மற்றும் டாஸ்மாக் வருவாயாக தான் உள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் புதுக்கோட்டையில் விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ‛தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட யாத்திரை பிரசார கூட்டத்தின் நிறைவு விழா புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்து வயலில் நடைபெற்றது.

the-dmk-government-is-the-most-corrupt-government-in-india-amit-shah-launches-a-strong-attack-in

இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் உள்பட பிற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அமித்ஷா பேசியதாவது:

இனி வரும் நாட்களில் பாஜகவும், அதிமுகவும் இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க போகிறோம் எப்பாடிபட்டவாது திமுகவின் ஆட்சியை ஒழித்தே தீருவோம். மக்களே.. ஒட்டுமொத்த நாட்டிலேயே எங்காவது மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் நிறைந்த ஆட்சி என்று சொன்னால் அது திமுகவின் ஆட்சி தான்.

தேர்தல் அறிக்கையிலேயே மிககுறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஆட்சி திமுகவின் ஆட்சி தான் . சகோதரிகள், தாய்மார்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒரே நோக்கம் என்று சொன்னால் அது முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவது தான். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை. தேர்வுகளை தமிழில் எழுதும் வசதிகளை பாஜக ஏற்படுத்தி உள்ளது.

செங்கோலினை காங்கிரஸ் மற்றும் திமுக அருங்காட்சியகத்தில் பாதுகாத்தனர். ஆனால் பிரதமர் மோடி அதனை நாடாளுமன்றத்தில் வைத்து அழகு பார்க்கிறார். துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணனை பதவியில் அமர்த்தி இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த திமுக அரசு ஊழலுக்கான எடுத்துக்காட்டு. ஊழலுக்கான அடையாளமாகி விட்டது.

மணலை அள்ளும் ஊழல் பெயரில் ஒரு தலைவரின் பெயர் உள்ளது. ஒரு தலைவரின் பெயர் நிலக்கரி ஊழலுடன் தொடர்பு கொண்டு வெளிவந்துள்ளது. ஒரு தலைவரின் பெயர் ரூ.6,000 கோடி ரூபாய் ஊழலில் தொடர்புப்படுத்தி வெளியாகி உள்ளது. இத்தனை ஊழல் நிறைந்த அமைச்சர்கள், அமைச்சரவையை வைத்து கொண்டு தமிழ்நாடு வளர்ச்சி காண முடியுமா? . தமிழ்நாட்டில் 20 சதவீதம் கட்டிங் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது. வரவு செலவு அறிக்கை கடன் மற்றும் டாஸ்மாக் வருவாயாக தான் உள்ளது.

தமிழக அரசு எவ்வளவு மோசமானது என்று சொன்னால் அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடும் நிலை உள்ளது. தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தெருவில் இறங்கி போராடும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 1,300 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். நர்ஸ், அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் உண்மையில் சிக்கல் வரும். திமுக அரசு தமிழகத்தை எப்படி ஆக்கி இருக்கிறது தெரியுமா? மற்ற மாநிலங்களின் நச்சு கழிவுகளுக்கான குப்பை கிடங்காக மாற்றி உள்ளது'' என்று கடுமையாக சாடினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+