15 நாளா தண்ணீர் வரல! மாலை வரை கெடு! அப்புறம் நானே ரோட்டில் உட்கார்ந்துடுவேன்! எச்சரித்த விஜயபாஸ்கர்!
புதுக்கோட்டை: இன்று மாலைக்குள் விராலிமலை மக்களுக்கு குடிநீர் வராவிட்டால் தாமே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என எச்சரித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
15 நாட்களாக தண்ணீர் வரவில்லை என மக்கள் சொல்கிறார்கள், என்னா விளையாடுறீங்களா எனக் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியை போனிலேயே வறுத்தெடுத்துள்ளார். தீபாவளி நேரத்தில் போராட்டம் செய்து அது பெரிய பிரச்சனையாகி விடும் எனக் கருதிய அந்த அதிகாரி இன்று மாலைக்குள் விராலிமலை மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதாக கூறியுள்ளார்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் தருகிறோம் என சட்டசபையில் மட்டும் அமைச்சர் பேசினால் போதுமா, தண்ணீர் எங்கே என போனில் ஸ்பீக்கர் போட்டபடி பேசினார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். இவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அந்த அதிகாரி, ஒரு கட்டத்தில் அண்ணே தண்ணீர் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம், கொடுத்திடலாம்ணே என சரண்டர் ஆனார்.
தனது தொகுதியான விராலிமலை மீது மட்டும் எப்போதும் தனிக்கவனம் செலுத்தக் கூடியவர் விஜயபாஸ்கர். அமைச்சராக இருந்த காலத்திலேயே துறை சார்ந்த ஆயிரம் பணிகள் இருப்பினும் விராலிமலை தொகுதிப் பணிகளுக்கு என வாரத்தில் ஒரு நாளாவது ஒதுக்கிக் கொள்வார். அதேபோல் வேறு ஊரில் எப்படியோ தெரியாது, விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் போன்ற பகுதிகளில் நான் உங்கள் வீட்டு பிள்ளை என்கிற கெட்டப்பில் எளிமையாக எல்லோருடனும் பேசி பழகுவார்.
தனது தொகுதியிலிருந்து யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தவறாமல் சென்று வந்துவிடுவார். இந்த பாண்டிங் தான் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அவரை ஹாட்ரிக் வெற்றி பெற வைத்தது. விராலிமலையில் விஜயபாஸ்கரை வீழ்த்திவிடலாம் என திமுக தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொண்டும் தொடர்ந்து தொகுதியை தக்க வைத்து வருகிறார். இதற்கு காரணம் குடிதண்ணீர் பிரச்சனை போன்ற மைக்ரோ அளவிலான பிரச்சனைகளில் கூட கவனம் செலுத்துவதேயாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications