'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்
புனே: கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம் என்றும் இந்து தர்மத்தை அவமதிக்கும் செயல் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
புனேவில் ஞாயிற்றுகிழமை (இன்று) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், " கடந்த 6 ஆண்டுகளாக நாம் என்ன பார்த்துக் கொண்டி வருகிறோம்? இந்த கொலைகள் புனேவில் மொஹ்சின் ஷேக் கொல்லப்பட்டதில் இருந்து தொடங்கியது. மாட்டுக்கறி கொண்டு சென்றதாக கூறி முகமது அக்லக் கொலை செய்யப்பட்டார். ஆனால், அது மாட்டுக்கறி அல்ல என்று பின்னர் சொன்னார்கள். ஒருவேளை அது மாட்டுக்கறியாகவே இருந்தாலும் ஒருவரை கொல்லும் உரிமையை கொடுத்தது யார்?, இது தான் நம் பாரதமா? இந்து தர்மம் சொல்வது இதுதானா? நானும் ஒரு இந்து தான் ஆனால் இந்த வகையானவன் அல்ல.
மக்களை கொல்லும் போது அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்லுமாறு கேட்கிறார்கள். இப்படி செய்வது இந்து தர்மத்தை அவமதிப்பதாகும். ராமரின் பெயரால் கொலைகள் நடப்பது கடவுன் ராமருக்கு அவமானம் ஆகும்"
பால் பண்ணைக்காக பசுக்களை லாரியில் ஏற்றிச் செல்ல பெலு கான் என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரும் அடித்துக் கொல்லப்பட்டார். ஒரு தேர்தல் வெற்றி எதனையும் செய்வதற்கும், யாரையும் கொல்வதற்கும் அதிகாரத்தை கொடுக்கிறதா?" இவ்வாறு கூறினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications