இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள்.. சீனா திட்டம்.. அதிகாரி பகீர் தகவல்
புனே: இந்தியக் கடல் பகுதியில் சீனா தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெற்கு பிராந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஏகே சாவ்லா தெரிவித்துள்ளார்.
புனே நகரில், சீனாவின் கடல் திட்டங்கள் என்ற பெயரிலான, கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏகே சாவ்லா பேசுகையில் கூறியதாவது:
மக்கள் புரட்சி ராணுவம் (PLA) என்ற பெயரிலான சீனாவின் கடற்படை 1985ஆம் ஆண்டு முதலே இந்திய கடல் பகுதியில் அவ்வப்போது நுழைந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு கடற் கொள்ளையை தடுப்பதற்காக ரோந்து என்ற பெயரில் தனது கப்பலை இங்கு அந்த ராணுவம் நிலைநிறுத்தியது.

நீர்மூழ்கி கப்பல்
இதன் பிறகு இதே காரணத்தை கூறிக்கொண்டு, அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்களையும் நிலைநிறுத்தியது. 2012 ஆம் ஆண்டு உளவு தகவல்களை சேகரிக்க கூடிய கப்பல்களை இந்திய கடல்பகுதியில் நிறுத்தியது. சிக்னல்கள், எலக்ட்ரானிக் உளவுகள், மேப் போன்றவற்றை அந்தக் கப்பல்கள் சேகரித்தன.

விமானம் தாங்கி கப்பல்
வழக்கமான மற்றும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றை இந்த பிராந்தியத்தில் 2013ஆம் ஆண்டு முதலே சீனா தொடர்ச்சியாக நிறுத்தி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது, விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்த பிராந்தியத்தில் வருங்காலங்களில் சீனா நிறுத்தக் கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீனா திட்டம்
சீனாவை பொறுத்த அளவில் இந்திய கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. கடல் சார்ந்த மற்றும் சாராத பல திட்டங்களை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் அந்த நாடு மேற்கொண்டு வருகிறது.

கடல் திட்டம்
இதன் மூலமாக இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் வங்கக்கடல் போன்ற பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications