பிரதமர் வேட்பாளர் எனும் 'ஆணியே' வேண்டாம்.. 'இந்தியா' கூட்டணியில் ஏன் சண்டை? ஒரே போடு போட்ட 'பவார்'!
புனே: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை "இந்தியா" கூட்டணி பிரதமர் வேட்பாளர் இல்லாமலேயே சந்திக்கலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் யோசனை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜகவை வீழ்த்தும் வகையில் 28 எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லி என 4 ஆலோசனைக் கூட்டங்களை 'இந்தியா' கூட்டணி நடத்தி உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பது; தொகுதி பங்கீட்டை சுமூகமாக மேற்கொள்வது என்பது 'இந்தியா' கூட்டணியின் முன் உள்ள பிரதான சவால்கள். இதற்கு அப்பால், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் யார் என்பதிலும் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இந்தியா கூட்டனியின் ஒருங்கிணைப்பாளர் பதவி, பிரதமர் வேட்பாளர் ஆகியவற்றை ரொம்பவே எதிர்நோக்கி இருப்பவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். ஆனால் டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை மமதா பானர்ஜியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தனர். இதில் நிதிஷ்குமாரும் அவரை ஆதரித்த லாலு பிரசாத் யாதவும் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் 'இந்தியா' கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலைமையும் உருவானது. இதனையடுத்து நிதிஷ்குமாரை தொலைபேசியில் அழைத்து ராகுல் காந்தி சமாதானப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடுதான் இப்போது முதன்மையானது. ஒருங்கிணைப்பாளர் பதவி, பிரதமர் வேட்பாளர் குறித்து எல்லாம் எனக்கு கோபமோ, அதிருப்தியோ எதுவும் இல்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், 1977-ல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தன. அப்போது யாரும் மொரார்ஜி தேசாய்தான் பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்லவில்லை. தேர்தலில் வென்ற பின்னர் அனைவரும் சேர்ந்து பிரதமர் யார் என முடிவு செய்யலாம். ஆகையால் 2024-ம் ஆண்டு தேர்தலை 'இந்தியா' கூட்டணியும் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்யாமலே தேர்தலை சந்திக்கலாம் என்றார் சரத்பவார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications