"என்னா சாரி?" பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குடிகாரரின் கன்னத்தில் 26 முறை பளார் விட்ட புனே பெண்!
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரின் கன்னத்தில் 26 முறை பெண் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு பேருந்து பயணத்தின் போது பெண்ணிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதனால் அந்த பெண் தன்னை எத்தனையோ முறை தற்காத்து கொண்ட போதிலும் அவர் மீண்டும் மீண்டும் தவறான முறையில் கை வைக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரது சட்டையை பிடித்து சரமாரியாக அடித்தார்.
அந்த நபரின் இரு கன்னங்களிலும் மாறி மாறி 26 முறை பளார் விட்டார். அந்த நபரை பெண் அறையும் போது அவர் போதையில் இருந்த காட்சிகளும் வெளியாகின. இந்த சம்பவத்தின் போது அவர் மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த பெண்ணோ என்னா சாரி என கேட்டு மேலும் தாக்கினார்.
பேருந்தில் இருந்தவர்கள் யாரும் அந்த பெண்ணை தடுக்கவில்லை. பிறகு நடத்துநர் அங்கு வந்து அந்த பெண்ணை சமாதானம் செய்தார். மேலும் காவல் நிலையத்திற்கு பேருந்தை இயக்கவுள்ளதாகவும் கண்டக்டர் தெரிவித்தார். ஆனாலும் அந்த பெண் அவரிடமும் சண்டையிட்டார். இந்த பெண் உடற்கல்வித் துறை ஆசிரியர் என தெரிகிறது. குழந்தைகளுடன் பேருந்தில் சென்ற போதுதான் இது போன்றதொரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அந்த பெண்ணை சிலர் பாராட்டியும் சிலர் திட்டியும் வருகிறார்கள். சட்டத்தை கையில் எடுக்கலாமா, தவறு செய்தால் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கலாமே, எதற்காக அவரை 26 முறை தாக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Pune Woman Slaps Drunk Man 25 times for Allegedly harrasing Her inside Bus
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 19, 2024
pic.twitter.com/S5kMNynJYf
குடி போதையில் இருந்த அந்த நபர் இந்த தாக்குதலால் இறந்துவிட்டால் என்ன செய்வது ? என கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு அரசு பேருந்து. இந்த பேருந்தில் வந்த அந்த பெண், தான் இறங்கும் இடம் வந்ததும் இறங்க ஆயத்தமானார். அப்போது அவரை அந்த போதை ஆசாமி பின்பக்கத்தில் கை வைத்ததாக கூறப்படுகிறது.
பேருந்துகள், ரயில்கள் இது போன்று பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதை சிலர் தட்டி கேட்கிறார்கள். சிலர் பிரச்சினையாகிவிட போகிறது என அஞ்சுகிறார்கள். இன்னும் சிலர் இந்த பெண்ணை போல் தாக்கும் செயலிலும் ஈடுபடுகிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications