"என்னா சாரி?" பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குடிகாரரின் கன்னத்தில் 26 முறை பளார் விட்ட புனே பெண்!
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரின் கன்னத்தில் 26 முறை பெண் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு பேருந்து பயணத்தின் போது பெண்ணிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதனால் அந்த பெண் தன்னை எத்தனையோ முறை தற்காத்து கொண்ட போதிலும் அவர் மீண்டும் மீண்டும் தவறான முறையில் கை வைக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரது சட்டையை பிடித்து சரமாரியாக அடித்தார்.
அந்த நபரின் இரு கன்னங்களிலும் மாறி மாறி 26 முறை பளார் விட்டார். அந்த நபரை பெண் அறையும் போது அவர் போதையில் இருந்த காட்சிகளும் வெளியாகின. இந்த சம்பவத்தின் போது அவர் மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த பெண்ணோ என்னா சாரி என கேட்டு மேலும் தாக்கினார்.
பேருந்தில் இருந்தவர்கள் யாரும் அந்த பெண்ணை தடுக்கவில்லை. பிறகு நடத்துநர் அங்கு வந்து அந்த பெண்ணை சமாதானம் செய்தார். மேலும் காவல் நிலையத்திற்கு பேருந்தை இயக்கவுள்ளதாகவும் கண்டக்டர் தெரிவித்தார். ஆனாலும் அந்த பெண் அவரிடமும் சண்டையிட்டார். இந்த பெண் உடற்கல்வித் துறை ஆசிரியர் என தெரிகிறது. குழந்தைகளுடன் பேருந்தில் சென்ற போதுதான் இது போன்றதொரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அந்த பெண்ணை சிலர் பாராட்டியும் சிலர் திட்டியும் வருகிறார்கள். சட்டத்தை கையில் எடுக்கலாமா, தவறு செய்தால் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கலாமே, எதற்காக அவரை 26 முறை தாக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Pune Woman Slaps Drunk Man 25 times for Allegedly harrasing Her inside Bus
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 19, 2024
pic.twitter.com/S5kMNynJYf
குடி போதையில் இருந்த அந்த நபர் இந்த தாக்குதலால் இறந்துவிட்டால் என்ன செய்வது ? என கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு அரசு பேருந்து. இந்த பேருந்தில் வந்த அந்த பெண், தான் இறங்கும் இடம் வந்ததும் இறங்க ஆயத்தமானார். அப்போது அவரை அந்த போதை ஆசாமி பின்பக்கத்தில் கை வைத்ததாக கூறப்படுகிறது.
பேருந்துகள், ரயில்கள் இது போன்று பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதை சிலர் தட்டி கேட்கிறார்கள். சிலர் பிரச்சினையாகிவிட போகிறது என அஞ்சுகிறார்கள். இன்னும் சிலர் இந்த பெண்ணை போல் தாக்கும் செயலிலும் ஈடுபடுகிறார்கள்.
-
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம்












Click it and Unblock the Notifications