கட்டுனா சிந்துவைத்தான் கட்டுவேன்.. "மலை"யிலிருந்து இறங்க மறுக்கும்... 75 வயசு "சாமி"!
பிவி சிந்துவை திருமணம் செய்ய 75 வயது நபர் மனு தந்துள்ளார்
ராமநாதபுரம்: எங்க இருந்தாலும் சரி.. சிந்துவை தூக்கிட்டு வந்து தாலி கட்டுவேன்.. அவர் மீது காதலை நான் ரொம்பவே வளர்த்து கொண்டேன்.. கட்டினா சிந்துவைதான் கட்டுவேன்" என்று ஒத்தை காலில் நிற்கிறார் 75 வயது தாத்தா மலைச்சாமி!
வழக்கமாக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் திங்கட்கிழமை ஆகிவிட்டால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடப்பது வழக்கம். இதில் அந்தந்த மாவட்ட மக்கள் தங்கள் விவசாய, தொழில் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளாக சொல்லி கலெக்டரிடம் மனு வழங்குவார்கள்.
இப்படித்தான், ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 75 வயசு தாத்தா மலைச்சாமியும் அந்த கூட்டத்துக்கு கையில் மனுவுடன் வந்திருந்தார். வயிற்றுப் பிழைப்புக்கோ, அல்லது வேறு ஏதேனும் அவசிய கோரிக்கைக்காக அவர் வந்திருப்பதாகத்தான் எல்லாரும் நினைத்தார்கள்.
வடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே
காதல்
நேராக போய் கலெக்டரிடம் ஒரு மனுவை தந்தார். அதில், "எனக்கு கல்வி மற்றும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உண்டு. ஆரம்பத்திலிருந்தே சர்வதேச விளையாட்டு வீராங்கனையாக இருந்து வரும் பி.வி.சிந்து வை மிகவும் பிடிக்கும் ஆகையால் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் நான் காதலை வளர்த்துக் கொண்டேன்.
மனு
பி.வி.சிந்துவை எங்கிருந்தாலும் தூக்கிக் கொண்டு வந்து கல்யாணம் செய்ய தயாராக இருக்கிறேன். அதனால் எனக்கு கல்யாணத்தை நடத்தி தர மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் முழு ஒத்துழைப்பு வழங்கி திருமணத்தை நடத்த வேண்டும்" என்று அந்த மனுவில் இருந்தது. அந்த மனுவுடன் சிந்துவின் போட்டோவும் ஒட்டப்பட்டிருந்தது.
தயார்
இந்த மனுவை படித்து பார்த்ததும் கலெக்டர் நிலைமை என்ன ஆனது என்று நமக்கு தெரியவில்லை.. ஆனால், "இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும்சரி.. பிவி சிந்துவை கல்யாணம் செய்ய தயாராக இருக்கிறேன்" என்று விடாப்பிடியாக பேசுகிறார் மலைச்சாமி!
வெறும் 16தான்
அதுமட்டுமில்லை, ‘நான் அவளை கல்யாணம் செய்ய எல்லா வேலையும் செய்துட்டேன். இதுல எனக்கு யாருடைய உதவியும் இல்லாமல் பண்ண முடியும். நான் பார்க்கத்தான் வயசான தோற்றத்துல இருக்கிறேன். எனக்கு வயசு வெறும் 16தான்" என்கிறாராம் தாத்தா மலைச்சாமி!