முதல்வர் வேட்பாளர்.. முன்னாள் எம்பி அன்வார் ராஜா பேச்சால் மீண்டும் அதிமுகவில் வெடித்த சர்ச்சை
ராமநாதபுரம்: வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்திதான் அதிமுக சந்திக்கும் என அக்கட்சியின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியுள்ளார். கட்சி தலைமையின் எச்சரிக்கையை மீறி அன்வர் ராஜா தெரிவித்துள்ள கருத்தால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
Recommended Video
அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓய்ந்திருந்திருந்த நிலையில் மீண்டும் கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் வெற்றி பெற்ற பின்னர் எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று கூறினார்.
இதற்கு உடனடி பதிலடியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்றும் அவரை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திப்போம் என்றும் கூறினார்.

தேனியில் போஸ்டர்
இதனிடையே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் தான் முதல்வர் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. இதனால் இரு தரப்பிலும் அதிருப்தி இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியது.

அதிமுக எச்சரிக்கை
அதன்பிறகு முதல்வர் வேட்பாளர் குறித்த யாரும் சர்ச்சை எழுப்பக்கூடாது என்றும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அதிமுகவினருக்கு ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டனர். இதனால் சர்ச்சை ஓய்ந்திருந்தது.

முதல்வர் வேட்பாளர்
இந்நிலையில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தியே அதிமுக தேர்தலை சந்திக்கும் என பரமக்குடியில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநில அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர்ராஜா பேசுகையில், கடந்த காலங்களில் பல கட்சிகளில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

முதல்வரை நிறுத்துவோம்
எனவே முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுவது ஒன்றும் புதிது அல்ல. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனால் தற்போது அதே நிலைமை நீடிக்காது. வரும் 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்திதான் அதிமுக தேர்தலை சந்திக்கும்" இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து யாரும் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி முன்னாள் எம்பி அன்வார ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications