இனி ‛புள்ளிங்கோ’ கட்டிங் கிடையாது.. பள்ளி மாணவர்களை திருத்த சலூன் தொழிலாளர் நலச்சங்கம் புதுமுடிவு
ராமநாதபுரம்: கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி மாணவர்களுக்கு ‛புள்ளிங்கோ’ ஹேர் கட்டிங் செய்யக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 ம் தேதி வரை நடந்து முடிந்தது. இதையடுத்து அவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் 1 முதல் 9ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இறுதி தேர்வு முடிந்த பிறகு ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் ஜுன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அதிகாரப்பூர்வமாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! கோடை வெயிலால் ஜுன் 10ல் பள்ளி திறக்கப்படும் என அறிவிப்பு
இதற்கிடையே தான் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒன்சைட் கட்டிங், பாக்ஸ் கட்டிங், மண்டையில் கோடு போடுவது, ஹேர் கலரிங் உள்ளிட்டவை செய்ய மாட்டோம் என்று முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் முத்துமாரி, செயலர் செந்தில் குமார், பொருளாளர் சேகர் கூறுகையில், ‛‛கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜுன் 10ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக மாணவர்கள் வலியுறுத்தினாலும் கூட ஒன்சைட் கட்டிங், பாக்ஸ் கட்டிங், மண்டையில் கோடு போடுவது உள்ளிட்டவற்றுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என நலச்சங்கத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளோம்’’ என்றனர்.
இந்நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் முடிவை பலரும் வரவேற்றுள்ளனர். இவர்கள் எடுத்த முடிவை பிற மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications