7 தமிழர்களை பற்றி தெரியாத போது அரசியல் பேசாதீங்க.. சரத்குமார் பரபரப்பு பேச்சு
தொண்டி: 7 தமிழர்களை பற்றி தெரியாத போது அரசியல் பேசாதீர்கள் என சரத்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
திருவாடானை ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றாலும் அதில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும். தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும்.

ரஜினியிடம் கேளுங்கள்
வந்தாரை வாழ வைப்போம். ஆள வைக்க விட மாட்டோம். கருத்து சொல்வதற்கு உண்மை வேண்டும். அது என்னிடம் மட்டுமே உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா என்றால் அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

தமிழிசை கருத்து
இன்றைய தலைவர்களில் நான் தான் சிறந்தவனாக இருப்பேன். 7 பேர் விடுதலை குறித்து ரஜினியிடம் கருத்து கேட்ட போது அவர் எந்த 7 பேர், நான் இப்போதுதான் வருகிறேன் என்று கூறியிருந்தார். அப்போது ரஜினி கேள்வியை உள்வாங்கவில்லை அவரிடம் அந்த கேள்வியை இன்னொரு முறை கேட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பார் என தமிழிசை கூறியுள்ளார்.

மன்னிப்பு
7 தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் தமிழக அரசியல் பேசக் கூடாது. செல்போன் மூலம் பேசாமல் தைரியமிருந்தால் நேரில் பேசுங்கள். போலீஸ் சட்டையை கழட்டி விடுவேன் என பேசுவது, பின்னர் மன்னிப்பு கேட்பது ஜனநாயகம் அல்ல.

அதிமுகவின் கொ.ப.செ.
நான் கடுமையாக உழைப்பவன். ஒரு காலத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக உழைத்தேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications