டெல்லியில் இலங்கை அமைச்சர்- சிங்கள படை மீண்டும் அட்டூழியம்! மேலும் 16 தமிழக மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் டெல்லியில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது; மேலும் தமிழக மீனவர்களின் 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை மிக மோசமான பொருளாதார பேரழிவில் சிக்கித் தள்ளாடுகிறது. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி மிக கடுமையாக உயர்ந்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

இந்தியாவிடம் கடன்
இப்படியான சூழலில் இந்தியாவிடம் பெருமளவு கடனுதவி பெறுவதற்காக இலங்கை அமைச்சர்கள் அடுத்தடுத்து டெல்லியில் முகாமிடுகின்றனர். அமைச்சர் பசில் ராஜபக்சேவை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

டெல்லியில் இலங்கை அமைச்சர்
டெல்லியில் ஜீ.எல். பீரிஸ் முகாமிட்டிருக்கும் நிலையில் இலங்கையில் சீனா ஆதரவு அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 105 மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். இத்தனைக்கும் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக மீனவர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

16 மீனவர்கள் கைது
இந்நிலையில் அடுத்த பேரிடியாக, பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

மத்திய அரசு கண்டிக்குமா?
டெல்லியில் இலங்கை அமைச்சர் முகாமிட்டிருக்கும் போதே தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவது, தமிழக மீனவர்களை கைது செய்வது என்கிற சிங்கள அரசின் அட்டூழியம் தொடருகிறது. ஆனால் இதுவரை மத்திய பாஜக அரசு இலங்கை அரசை கிஞ்சித்தும் கூட கண்டிக்காதது தமிழர்களிடையே கடுமையான விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபாவில் தமிழர் குறித்து பேசிய பிரதமர் மோடியும் கூட இலங்கையை ஒருவார்த்தை கூட கண்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
ரஷ்ய எண்ணெய்யை வாங்க.. அனுமதி கொடுத்த அமெரிக்கா! பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்! -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications