ராமநாதபுரத்தில் 33 வார்டுகளில் 17 வார்டுகளில் பெண்கள் களம்.. சூடுபிடிக்கும் நகர்ப்புற தேர்தல்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகராட்சி உள்பட மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 17 வார்டுகளில் பெண்கள் போட்டியிடுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுதாக்கல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 17 வார்டுகள் பெண்களுக்கும் 15 வார்டுகள் பொது வார்டுகளாகவும் 1 வார்டு எஸ்சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டுகள்
பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் 4,7, 11, 14, 17, 19, 22, 23, 25, 27, 29, 32 மற்றும் 33 ஆகிய 16 வார்டுகள் பெண்கள் போட்டியிடும் வார்டுகளாக உள்ளன. அது போல் பொது வார்டுகளாக 5,7,10, 12, 13,15,16, 18,20, 21, 24, 30 மற்றும் 31 ஆகிய வார்டுகள் உள்ளன. எஸ்.சி. மகளிர் பிரிவினருக்கு 26-வது வார்டும்,எஸ்.டி. பொது பிரிவினருக்கு 28-வது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பழைய பதவி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அவர்கள் ஊரக உள்ளாட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு வேளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பழைய பதவியிலிருந்து நீக்கப்படுவர்.

இருவர் மட்டுமே
அது போல் வாக்கு சேகரிக்க வேட்பாளர்களுடன் இருவருக்கு மேல் செல்லக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஆன்லைன், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வது குறித்து கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் பணி நடந்து வருகிறது. கட்சிகளும் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications